states

img

பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு குமாரசாமி மறுப்பு

“வரும் 2024 மக்களவைத் தேர்தலில் கர்நாட காவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் -  பாஜக கூட்டணிக்கான புரிதல் ஏற்பட்டுள்  ளது. மக்களவைத் தேர்தலில்  மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு 4 தொகுதிகள் ஒதுக்க அமித் ஷா சம்மதித்துள்ளார்” என  அம்மாநில முன்னாள் முதல்வ ரும், மூத்த பாஜக தலைவரு மான எடியூரப்பா வெள்ளியன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிலையில், “பாஜக கூட்டணியில் மதச்சார்  பற்ற ஜனதா தளம் இணைந்துள்ளதாக கர்நாடக  முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறி இருப்பது அவ ரது தனிப்பட்டக் கருத்து” என்று மதச்சார்பற்ற ஜனதா  தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வரு மான எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார். “எடி யூரப்பா கூறியது அவரது தனிப்பட்டக் கருத்து. தொகுதிப் பங்கீடு தொடர்பாக இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. நாங்கள் இரண்டு, மூன்று முறை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துள்ளோம். என்ன நிகழ்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். நேரம் இருக்கிறது” என அவர் கூறியுள்ளார். பாஜகவுடன் கூட்டணி சேர மதச்சார்பற்ற ஜனதா  தள மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான  எச்.டி.தேவகவுடாவும் ஏற்கெனவே எதிர்ப்பு தெரி வித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.