கோவை,மே 5- கொடநாடு வழக்கு தொடர்பாக குற்றஞ்சாட்டப் பட்ட பிஜின்குட்டியின் சகோ தரரான மோசஸ் என்பவரிடம் கோவையில் தனிப்படை காவல்துறையினர் விசார ணை நடத்தினர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்த மான நீலகிரி கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் நடைபெறுகிறது. சசிகலா உட்பட 200-க்கும் மேற்பட்டோரிடம் விசா ரணை நடத்தப்பட்டுள்ளது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை யினர் விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்ட ஆறாவது நபரான பிஜினின் சகோதரர் மோச ஸிடம் விசாரணை மேற் கொண்டனர்.