சென்னை,பிப்.7- மாணவிகளுக்கு மாதவிடாய்காலத்தில் கேரள அரசு விடுத்திருக்கும் விடுமுறை அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் வர வேற்றுள்ளது. இதுகுறித்து அக்கட்சி மாநில செயலாளர் மூகாம் பிகை ரத்தினம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:- கேரளாவிலுள்ள அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்க ளில் பயிலும் மாணவி களுக்கு மாதவிடாய் மற்றும் மகப்பேறுகால விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பெரிதும் வரவேற்கத் தக்கது. நாட்டிலேயே முன் மாதிரித் திட்டமாக இதை செயல்படுத்தியுள்ள கேரள அரசை மக்கள் நீதி மய்யம் பாராட்டுகிறது. கொச்சி அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் செயல்படுத்திய இந்த திட்டத்தை, மாநிலம் முழு வதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு கேரள அரசு விரிவுபடுத்தி யுள்ளது. மாணவிகளின் நலன் கருதி தமிழ்நாட்டிலும் இந்த திட்டத்தைச் செயல் படுத்த வேண்டும். அதே போல, கல்லூரி, பள்ளி மாணவிகள் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களைப் போக்க இதுபோன்ற முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தவும், தக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வும் அரசும், கல்வித்துறை யும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள் ளார்.