states

கேரளா : ஆர்எஸ்எஸ் முகாமில் வெடிகுண்டுகள் மீட்பு

கண்ணூர், ஏப்.20- கண்ணூர் அருகே பானூர் ஆர்எஸ்எஸ் முகா மில் இருந்து நான்கு நாட்டு  வெடிகுண்டுகள் மீட்கப்பட் டன.   செண்டையாடு குனிம் மல் கால்வாய் அருகே ஆளில் லாத வீட்டில் செவ்வாயன்று (ஏப்.19) பகல் 11 மணியளவில் வெடிகுண்டுகள் கண் டெடுக்கப்பட்டன. அப்துல் சமது என்பவருக்கு சொந்த மான வீட்டின் சமையலறை உள் அடுக்கில் பிளாஸ்டிக் பையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன. வெற்று ஐஸ்கிரீம் பந்தில்  வெடிகுண்டுகள் தயாரிக்கப் பட்டிருந்தன. சம்பவ இடத்தில் குண்டு தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களையும் காவல் துறையினர் கண்டுபிடித்த னர். எஸ்ஐ மனோகரன் தலைமையிலான போலீசார் மற்றும் கண்ணூரில் இருந்து வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் இந்த சோதனை நடத்தினர்.