தெலுங்கானா முதல்வரைச் சந்தித்து ஆதரவு திரட்டிய கெஜ்ரிவால்
தில்லியின் நிர்வாக அதிகாரம், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உள்ளது என்று உச்ச நீதி மன்றம் அண்மையில் தீர்ப்பளித்த நிலையில், அந்த அதிகாரத்தைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது. ஆனால், இந்த அவசரச் சட்ட மசோதா நாடாளு மன்றத்தில் கொண்டுவரப்படும் பட்சத்தில், அதனைத் தோற்கடிப்பதற்கு, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், எதிர்க்கட்சிகளின் ஆதரவைத் திரட்டி வருகிறார். அந்த வகையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரைச் சந்தித்த கெஜ்ரிவால், சனிக்கிழ மையன்று தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
மாற்றாந்தாயாக பாஜக நடந்து கொள்கிறது: ஷிண்டே அணி கதறல்
பாஜக தங்கள் கட்சியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த கஜனன் கிர்த்திகர் எம்.பி. தெரிவித்துள்ளார். நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறோம்; அதற்கேற்ப எங்களை முறையாக நடத்த வேண்டும் என்று கூறியிருக்கும் கஜனன் கிர்த்திகர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் செய்த தொகுதிப் பங்கீட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில், மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில், சிவசேனா 18; பாஜக 23 என 41 தொகுதிகளைக் கைப்பற்றின. இதில், சிவசேனா சார்பில் வென்ற 13 பேர் ஷிண்டே அணியிலும், 5 பேர் உத்தவ் தாக்கரே அணியிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக ஒரு முதலை, மலைப்பாம்பு: சஞ்சய் ராவத் சாடல்
“சிவசேனா (உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே) பாஜக-விடமிருந்து விலகியே உள்ளது. பாஜக சிவசேனாவை அழிக்க நினைக்கிறது. பாஜக ஒரு முதலை அல்லது மலைப்பாம்பு போன்றது. அவர்களோடு சேர்ந்து பயணிப்பவர்கள் (ஷிண்டே அணியினர்) அவர்களால் (பாஜகவினரால்) விழுங்கப்படுவார்கள். உத்தவ் தாக்கரே பாஜக-விடமிருந்து விலகியிருப்பதற்கான காரணத்தை, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தற்போது புரிந்து கொண்டிருப்பார்கள். பாஜக அவர்களின் வார்த்தைகளை காப்பாற்றவில்லை. சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் நிதி யளிப்பதில்லை. மேலும், அவர்கள் சிவசேனா தலைவர்களை அவமதிக்க முயற்சிக்கிறார்கள்” என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சாடியுள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் 6 மதத்திற்கு மட்டுமே இடம்
ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் உள்ள இயற்கையை வணங்கும் பழங்குடி மக்கள், தங்களின் சர்னா மதத்தை, தனி மதமாக கருத வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதேபோல கர்நாடகாவின் லிங்காயத்துகளும் தங்களைத் தனி மதமாக அறிவிக்கக் கோரி வருகின்றனர். ஆனால், அடுத்து நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான படிவத்தில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், பவுத்தம், சீக்கியம், ஜைனம் ஆகிய 6 மதங்கள் மட்டுமே தனித்தனி மத விருப்பங்களாக கணக்கிடப்படும். அதற்கான குறியீடுகள் இடம்பெறும். பதிலளிப்ப வர்கள் கூடுதலாக வேறு எந்த மதத்தின் பெயரையும் மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் எழுதலாம் என்றாலும், தனி குறியீடு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முடிந்தால் ஆர்எஸ்எஸ்ஸை தடை செய்யுங்கள்: காங்கிரசுக்கு சவால்!
“துணை முதல்வர் என்பது அரசியல் சாசன பதவி அல்ல. கட்சிகள்தான் இந்த பதவியை வழங்கு கின்றன. கர்நாடகத்தில், அரசு ஆலோசனை கூட்டங்களில் முதல்வர் பேசுவதற்கு முன்னரே துணை முதல்வர் பேசுகிறார். புதிய அரசு வரும்போது, முதல்வர், அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து பேசுவது வழக்கம். ஆனால் புதிய ஆட்சியில் முதல்வர் (சித்தராமையா) அமைதியாக உள்ளார். துணை முதல்வர் (டி.கே. சிவகுமார்) ஆவேசமாக பேசுகிறார். அதிகாரி கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் இந்து அமைப்பினருக்கு அவர் மிரட்டல் விடுக்கிறார். இதனி டையே, அமைச்சர் பிரியங்க் கார்கே, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்கப் போவதாக சொல்கிறார். இதை யாராலும் செய்ய முடியாது. தைரியம் இருந்தால் அந்த அமைப்புக்கு தடை விதியுங்கள் பார்க்கலாம்” என்று கர்நாடக முன்னாள் அமைச்சர் ஆர். அசோக் சவால் விடுத்துள்ளார்.
பிரிஜ் பூஷனை சிறையில் தள்ள வேண்டும்: ராம்தேவ் ஆவேசம்
“இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளும், நீதி கிடைக்காமல் மல்யுத்த வீராங்கனைகள் இன்னமும் தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வருவதும் தேசத்துக்கு அவமானம். இத்தனைக்கும் இடையே பிரிஜ் பூஷன் நாளும் ஏதேனும் அபத்தங்களை பேசி வருகிறார். அவர் நம் தேசத்தில் தாய்மார்கள், சகோதரிகள், மகள்களை அவ மதிக்கிறார். அவரைப் போன்றோரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவருடைய செயல்கள் கண்டனத்துக்குரியவை. இந்த விவகாரத்தில் நான் என் கருத்தை மட்டுமே சொல்ல முடியும். அவரை நான் கைது செய்ய இயலாது” என்று பாஜக ஆதரவாளரும், கார்ப்ப ரேட் சாமியாருமான பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
‘தி டைரி ஆப் வெஸ்ட் பெங்கால்’ இயக்குநருக்கு சம்மன்!
பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள படம் ‘தி டைரி ஆப் வெஸ்ட் பெங்கால்’ (‘The Dairy of West Bengal’). இப்படத்தின் டிரைலர் ஏப்ரல் 8 அன்று வெளியான நிலையில், அதில், மேற்குவங்க மாநிலத்தில் அதிக கொலைகள் நடப்பது போலவும், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும் இந்து மக்கள் மேற்குவங்க மாநிலத்தில் இருந்து விரட்டி யடிக்கப்படுவதாகவும், மேற்கு வங்கம் இந்தியாவின் இரண்டாவது காஷ்மீராக மாறியுள்ளது என வும் கூறப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொல்கத்தாவின் அம்ஹெர்ஸ்ட் வீதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், 30-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு படத்தின் இயக்குநர் சனோஜ் மிஸ்ராவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
உலகச் செய்திகள்
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியப் படைகளால் ஆக்கிர மிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான மேற்குக் கரைப்பகு தியில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். யூதர்கள் குடியிருப்பு ஒன்றில் நுழைந்து அங்கு குடியிருக்கும் ஒருவரைத் தாக்க முயன்றார் என்று அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தகைய முயற்சி எதை யும் அவர் மேற்கொள்ளவில்லை என்றும், அவர் கையில் எந்தவித ஆயுதமும் இருக்கவில்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று(மே 28) ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயி னில் உள்ளூர் மட்டத்திலான தேர்தல்கள் நடைபெற விருக்கின்றன. டிசம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவே இது பார்க்கப்படுகிறது. நாட்டில் உள்ள 17 பிராந்திய அரசுகளுக்கு வீட்டு வசதி, கல்வி, சுகாதாரம் மற்றும் காவல்துறை ஆகிய துறைகளில் முடிவெடுக்கும் மற்றும் நிதி ஒதுக்கும் அதிகாரம் உள்ளது.
கிரீஸ் நாடாளுமன்றத் தேர்தல்களில் யாருக்கும் பெரும் பான்மை கிடைக்காத நிலையில், ஞாயிறன்று உறுப்பினர்கள் பொறுப்பேற்க உள்ளனர். ஐயோன்னிஸ் சர்மாஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. எந்தக் கட்சியும் அரச மைக்க முன்வராததால் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. ஜூன் 25 ஆம் தேதியன்று இரண்டாவது சுற்றுத் தேர்தல் நடத்தப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.