சென்னை, நவ.5- காசி தமிழ்ச் சங்கமும், சென்னை அய்.அய்.டி.யும் இணைந்து நடத்தும் சங்கமத்தின் பின்னணியில் இருப்பது இந்துத்துவா - சனாதனப் பயிற்சியே இது தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள விரிவான அறிக்கையின் சுருக்கம் வருமாறு: பனாரஸ் இந்து பல்கலைக்கழ கமும், சென்னை அய்.அய்.டி.யும் இணைந்து இந்த ‘காசி தமிழ்ச் சங்க மத்தை’ நடத்துகிறார்களாம் இதன் அறிமுக நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி “கடந்த 200 ஆண்டுகளில், நம் வரலாறும், நாம் யார் என்பதும் அழிக் கப்பட்டுவிட்டது. அதனால், நம் நாட்டை நமக்கே மீண்டும் அறிமுகப் படுத்த நாம் முயல வேண்டும். அயல் நாட்டவர்களால் உருவாக்கப்பட்ட ‘இந்தியா’ என்ற கருத்தாக்கம், ‘பாரதம்’ என்ற சிந்தனையை மறைத்து விட்டது” என்று பேசியிருக்கிறார். எதற்காக இந்த சங்கமமாம்? இதற்கும் ஒரு தொழிற்கல்வி நிறுவனத் திற்கும் என்ன சம்பந்தமாம்? அறிவியல் தொழில்நுட்பத் துறையில் மாணவர்களை உருவாக்க வேண்டிய சென்னை அய்.அய்.டி-க்கு இது என்ன வேலை? ‘‘தேசபக்தி’’ என்ற சொல்லின் மீது, மதவெறியை ஏற்றுவதும், பழைய பண்பாடு, பாரம்பரியம் என்ற பெயரில் ஒற்றை மதச் சாயத்தை ஊற்றுவதும் தான் வெகுமக்களை ஏமாற்றித் தன் வலையில் விழ வைக்க ஆர்.எஸ்.எஸ். கடைப்பிடிக்கும் தந்திரங்கள். ஆர்.எஸ்.எஸ்.சின் இந்தத் தந்திர வித்தையைச் செய்யத்தான் பல கோடி ரூபாய் செலவில் நம் மக்கள் வரிப்ப பணத்தை வீணடிக்கப் போகிறார்களா? இது தடுத்து நிறுத்தப்படவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.