ஸ்ரீநகர், டிச.16- எங்களை நியமனம் செய்ய வேண்டாம். அப்படி நியமிப்பது “பல் இல்லாத புலிக்கு ஒப்பானது” எங் களை பேசவிடாமல் மௌனிகளாக மாற்றுவதன் நோக்கம் தான் ஒன்றிய அரசின் நடவடிக்கை என காஷ்மீரி பண்டிட் சங்கர்ஷ் சமிதி (கேபிஎஸ்எஸ்) தலைவர் சஞ்சய் டிக்கூ கூறியுள்ளார். சட்டமன்றத்தில் மூன்று இடங் களை எங்களுக்கு ஒதுக்குங்கள் என காஷ்மீரி பண்டிட்டுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு சட்டமன்றம் செல்பவர்களுக்கு இருக்கும் மரியாதையும் மதிப்பும் எங்களுக்கு இருக்காது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில் காஷ்மீரி பண்டிட்டுகள் சார்பில் இரண்டு உறுப்பினர்களை நியமனம் செய்ய லெப்டினன்ட் கவர்னருக்கு அதி காரம் அளிக்கும் மசோதாவை நாடாளு மன்றத்தில் நிறைவேற்றியுள்ள நிலை யில், எங்களை நியமிப்பதற்குப் பதில் சட்டமன்றத்தில் எங்களுக்கு மூன்று இடங்கள் ஒதுக்க வேண்டுமென பண்டி ட்டுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஷ்மீரி பண்டிட் சங்கர்ஷ் சமிதி (கேபிஎஸ்எஸ்) தலைவர் சஞ்சய் டிக்கூ கூறுகையில், லெப்டினன்ட் கவர்னர் ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு இரண்டு உறுப்பினர்களை பரிந்துரைப்பது எந்த நோக்கத்தையும் நிறைவேற்றாது. பண்டிட்டுகளை “இலவசமாக சட்ட சபைக்கு அனுப்பி வைப்பது” எங்கள் சமூகத்தை பேசவிடாமல் மௌன மாக வைக்கவேண்டும் என்ற நோக்க மாக இருக்கலாம். நியமனம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்டு அனுப்புபவர்களுக்கு இருக்கும் மரியாதையும் கண்ணிய மும் இருக்காது. சட்டமன்றத்திற்கு நியமனம் என்பது “பல் இல்லாத புலி” போன்றது அல்லது எஜமானரின் கட்டுப் பாட்டிற்குட்பட்டு மிருகக் காட்சி சாலை யில் அடைத்து வைக்கப்படும் புலிக்கு ஒப்பானதாகும். காஷ்மீர் பள்ளத்தாக்கில் குறிப் பாக வடக்கு காஷ்மீரில் ஒரு இடம், தெற்கு காஷ்மீரில் பிஜ்பெஹாரா தொகுதி, மத்திய காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஹப்பா கடல் தொகுதி ஆகிய வற்றை பண்டிட்களுக்கு ஒதுக்க வேண்டுமென்றார்.