states

‘அமுல்’ நிறுவனத்திற்கு எதிராக கொதித்தெழுந்த கர்நாடகா!

பெங்களூரு, ஏப்.10 - குஜராத்தைச் சேர்ந்த ‘அமுல்’ கூட்டுறவு பால் நிறுவனத்தின் தயாரிப்புக்களுக்கு கர்நாடகத்தில் மிகப் பெரிய எதிர்ப்பு எழுந்தது. குஜராத்தின் ‘அமுல்’  தயாரிப்பு பால் பொருட்களைப் புறக்கணிப்போம்; குஜராத்தின் ‘நந்தினி’ கூட்டுறவு பால் நிறுவனத்  தைப் பாதுகாப்போம் என்ற முழக்கங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகின்றன. குஜராத்தை மையமாகக் கொண்டு செயல்படும் அமுல் நிறுவனம், நாட்டின் மிகப்பெரிய பால் கூட்டு றவு நிறுவனமாகும். பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பிலும், விநியோகத்திலும் நாட்டிலேயே முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில்தான், குஜராத்தைச் சேர்ந்த வரும், ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, கடந்த டிசம்பரில் மாண்டியாவில் நடந்த பொதுக்  கூட்டத்தில் பேசுகையில், “கர்நாடகத்தின் ஒவ்வொரு  கிராமத்திலும் 3 ஆண்டுகளுக்குள் முதன்மை பால்  பண்ணைகள் அமைக்க அமுலும் நந்தினியும் இணைந்து செயல்படுவார்கள்” என்று அறிவித்தார். ‘நந்தினி’ என்பது, கர்நாடகா பால் கூட்டமைப்பு (Karnataka Milk Federation - KMF) தயாரித்து வழங்கும் பால் மற்றும் பால் பொருட்களின் பிராண்ட் ஆகும்.  அந்த வகையில், ‘நந்தினி’யும், குஜராத்தின் ‘ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட்’ (Amul) நிறு வனமும் இணைந்து பெரிய பண்ணைகளை அமைப்பார்கள்; அல்லது அமைக்க வேண்டும் என்ற விருப்பத்தை, மறைமுகமான உத்தரவை அமித்ஷா பிறப்பித்தார்.

எனினும் கர்நாடக மக்கள் அப்போது அதனை பெரிதாக கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அமுல் நிறுவனம் கடந்த வாரம் பெங்க ளூருவில் கெங்கேரி முதல் வொயிட்பீல்ட் வரையில் பால் மற்றும் தயிர் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்தது. இந்த விற்பனையை ‘குவிக் காமர்ஸ்’ நிறுவனங்கள் உடன் இணைந்து ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வதாகவும் அறிவித்தது. இதன்பிறகுதான் கர்நாடக மக்கள் இதனைப் பிரச்சனையாகவே பார்க்க ஆரம்பித்தார்கள். உட னடியாக டுவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூகவலை தளங்களில் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். ‘அமுலே திரும்பிப் போ..’; ‘நந்தினி யைப் பாதுகாப்போம்’ (#GoBackAmul, #Save Nandini) என முழக்கங்களை டிரெண்ட் செய்ய ஆரம்பித்தனர். கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி துவங்கிய  இப்போராட்டம் நாளுக்கு நாள் வேகமெடுக்க ஆரம்பித்தது. “கர்நாடகத்தில் நுழைய ‘அமுல்’ ஏற்கெனவே முயற்சி செய்தது, ஆனால் எங்களுடைய (காங்கி ரஸ்) ஆட்சி அதை தடுத்தது. ஆனால் தற்போதைய கர்நாடக பாஜக அரசு வரவேற்றுள்ளது” என டுவீட் செய்தார். அத்துடன், பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்து, “நீங்கள் கர்நாடகா வந்ததன் நோக்கம் கர்நாடகாவுக்கு கொடுப்பதா அல்லது கர்நாடகா வில் இருந்து கொள்ளையடிப்பதா?” என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், “அமுல் பொருட்களை வாங்க மாட்டோம் என்று அனைத்து கன்னடர்களும் உறுதி மொழி எடுக்க வேண்டும்.. மாநிலத்தில் உள்ள விவ சாயிகளின் நலனைக் காக்க ஏற்படுத்தப்பட்ட கர்நாடகா பால் கூட்டமைப்பை அழிக்க முயல்ப வர்களை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும். இந்தித் திணிப்பு என்ற மொழி துரோகம் மட்டுமின்றி, லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரமாக விளங்கும் கர்நாடகா பால் கூட்டமைப்பையும் முடக்கி  விவசாயிகளுக்குத் துரோகம் செய்யப் போகிறது பாஜக அரசு. குஜராத்தைச் சேர்ந்த பிரதமரும், உள்துறை அமைச்சரும் இணைப்பு முயற்சிகள் வெற்றி பெறாததால், பின் வாசல் வழியாகக் கர்நாட காவுக்குள் அமுலைக் கொண்டுவர முயல்கின்ற னர். இந்த விவகாரத்தில் முதல்வர் பொம்மை உட னடியாக தலையிட வேண்டும்” என்றும் வலியு றுத்தினார்.

“நந்தினியின் பால், நெய், வெண்ணெய் ஆகி யவையே இன்னும் மாநிலத்தின் அனைத்துப் பகுதி களிலும் கிடைக்காத சூழ்நிலையில், குஜராத்தின் அமுல் நிறுவனத்தின் ஆன்லைன் விற்பனை அறி விப்பு எதைக் குறிக்கிறது? எண்ணற்ற கன்னடர்  களின் உழைப்பை இது அழிப்பதாகத் தெரிய வில்லையா.. இது நந்தினியை அழிக்கும் ஒரு தீய  திட்டம் என்பதில் சந்தேகமே இல்லை. இதை நாம்  ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது” என்ற மதச்சார்  பற்ற ஜனதாதளம் தலைவர் எச்.டி. குமாரசாமி, “’ஒரு தேசம், ஒரு அமுல், ஒரு பால் மற்றும் ஒரு குஜராத்’  என்பதே ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ கொள்கை யாக மாறியுள்ளது. இதன் காரணமாகவே அவர்கள்  நந்தினியை அழிக்க முயல்கின்றனர்” என்றும் குற்றம் சாட்டினார். கர்நாடக பால் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக பெங்களூர் ஹோட்டல் அமைப்  பான ‘பிருஹத் பெங்களூரு ஹோட்டல்ஸ்’ (Bruhat Bangalore Hotels’ Association - BBHA), அமுல்  நிறுவன பொருட்களை மொத்தமாக தடை செய்து விட்டு.இனி நந்தினி பால் மற்றும் பால் பொருட்களை மட்டுமே வாங்க முடிவு செய்துள்ளோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

“பெங்களூரு ஹோட்டல்களில் தினமும் 4 லட்சம் லிட்டர் பால், 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம்  லிட்டர் வரை தயிர் வாங்கப்படுகிறது. இந்நிலையில், ஹோட்டல் அமைப்புகள் முடிவெடுத்தது போலவே மாநிலத்தில் அனைத்து அமைப்புகளும், மக்களும்,  ‘நந்தினி’யை நம்பியிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்று பிபிஎச்ஏ (BBHA)  தலைவர் பி.சி. ராவ் வேண்டுகோளும் விடுத்தார். 1955-ஆம் ஆண்டு குடகு மாவட்டத்தில் உரு வாக்கப்பட்ட நிறுவனம்தான் கர்நாடகா பால் கூட்ட மைப்பு (Karnataka Milk Federation - KMF) ஆகும்.  இதுதான் ‘நந்தினி’ பிராண்ட் பால் பொருட்களைத் தயாரித்து வழங்கி வருகிறது. தற்போது, 22,000 கிராமங்கள், 24 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் 14,000 கூட்டுறவு சங்கங்கள் என ஒவ்வொரு நாளும் தோராயமாக 84 லட்சம் லிட்டர் பால் கொள்  முதல் செய்யும் நிறுவனமாக ‘கேஎம்எப்’ மிகப் பெரிய வலையமைப்பை பெற்றுள்ளது. நந்தினி பால் பிராண்டானது, ஆரம்ப காலத்தில் டாக்டர் ராஜ்குமார் துவங்கி உபேந்திரா மற்றும் புனித்  ராஜ்குமார் போன்ற திரைப்பிரபலங்கள் பலராலும் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்ட ஒன்றாகும். அவ்  வாறிருக்கையில் அதனை அழிக்கும் வகையில், ‘அமுல்’ நுழைவதை ஏற்க முடியாது என்பதுதான் கர்நாடக மக்களின் எண்ணமாக உள்ளது.

இதுதொடர்பாக பேசியிருக்கும் கர்நாடக காங்கி ரஸ் தலைவர் டி.கே. சிவகுமார், “கர்நாடகாவின்  ஆளும் கட்சியான பாஜக, வேண்டுமென்றே குஜராத்தின் அமுலை இங்கே திணிக்கிறது.  அமுலைவிட நந்தினி பால் மற்றும் பால் பொருட்கள்  தரமானவை. எங்களிடம் தரமான ஒரு பிராண்ட்  இருக்கும்போது எங்களுக்கு அமுல் எதற்கு? எங்கள் தண்ணீர்; எங்கள் மண்; எங்கள் பால் அது தான் எங்களுக்கு வலிமை’’ என தெரிவித்துள்ளார். ஹசன் நகரில் உள்ள நந்தினி பால் விற்பனைய கத்துக்கு வந்து அங்கு நந்தினி பால் பொருட்களை வாங்கி தனது ஆதரவாளர்களுக்கு விநியோகித்தும் தனது ஆதரவை டி.கே. சிவகுமார் தெரிவித்தார். பெங்களூருவில் அமுல் விற்பனைக்கு எதிர்ப்பு  தெரிவித்து கர்நாடகா ரக்ஷண வேதிகே அமைப்பி னரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தடாலடி வேலைகளால், அமுல் ஆன்லைன் வர்த்தக வியாபாரம், கர்நாடக, குஜராத் பால் நிறுவனங்கள் (இரண்டுமே அந்தந்த மாநில விவசாயிகளின் கூட்டுறவு அமைப்புக்கள்) இடையிலானதாக மட்டுமல்லாமல், இரு மாநில  மக்களுக்கும் இடையிலான மோதலாக மாற்றப் பட்டுள்ளது.