கண்ணூர், அக்.29- கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக் கழக கல்லூரி மாணவர் பேரவைத் தேர்த லில் இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) அமோக வெற்றி பெற்றது. அமைப்பு ரீதியாக தேர்தல் நடைபெற்ற 69 கல்லூரிகளில் 52 இல் எஸ்எப்ஐ வேட்பா ளர்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றனர். கண்ணூர் மாவட்டத்தில் உள்ள 44 இல் 35 கல்லூரிகளிலும், காசர்கோ டில் 20க்கு 13 இடங்களிலும், வயநாடு ஐந்தில் நான்கிலும் எஸ்எப்ஐ வெற்றி பெற்றுள்ளது. கண்ணூர் 23, காசர் கோடு 6, வயநாடு மூன்று கல்லூரிக ளில் எஸ்எப்ஐ அனைத்து இடங்களி லும் போட்டியின்றி வெற்றி பெற்றது. பல்கலைக்கழக பேரவைக் கவுன்சிலர்க ளின் எண்ணிக்கையிலும் எஸ்எப்ஐ கணி சமான இடங்களைப் கைப்பற்றியது. கண்ணூரில் 49, காசர்கோடு 15, வயநாட்டில் 4 என மொத்தம் 68 கவுன்சி லர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கண்ணூர் எஸ்.என்., ஸ்ரீகாந்தபுரம் எஸ்.இ.எஸ்., மாதை கல்லூரியில் மாண வர் மோதல் காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. கண்ணூர் அரசு மக ளிர் கல்லூரி, தலச்சேரி அரசு பிரன்னன் கல்லூரி, பையன்னூர் கல்லூரி, தோட்டா எஸ்என்ஜி, கண்ணூர் பல் கலைக்கழகம் மாங்காட்டுபரம் வளா கம், பெரிங்கோம் அரசு கல்லூரி, மட்டன்னூர் பழசிராஜா கல்லூரி மற்றும் 12 கல்லூரிகளில் எஸ்எப்ஐ வேட்பாளர்கள் அபார பெரும்பான்மை யுடன் வெற்றி பெற்றனர். பைசாகரி தேவமாதா கல்லூரி உட்பட எஸ்எப்ஐ கைப்பற்றியது.