states

கள்ளக்குறிச்சி கலவரம்: தீ வைத்தவர் கைது

 கள்ளக்குறிச்சி, ஜூலை 26- சின்ன சேலம் அருகே கணியா மூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீமதி யின் மரணத்திற்கு நீதி கேட்டு நடை பெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின் போது பள்ளி வளாகத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். இதுதொடர்பாக சிறப்பு புல னாய்வு பிரிவு காவலர்கள் விசா ரணை மேற்கொண்டு வந்த நிலை யில், காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்ததாக சின்னசேலம் அருகே பூசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர். பின்னர் கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) முகமது அலி முன்பு மணிகண்டன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கனியாமூர் கலவரத்தில் ஈடுபட்ட வர்களை கைது செய்ய அப்பகுதி யில் உள்ள செல்போன் நெட்வொர்க் மற்றும் தேசிய நெடுஞ்சாலை யில் உள்ள கண்காணிப்பு கேமராக் களை ஆய்வு செய்து காவல்துறை யினர் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.