கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம் என்றார் கலைஞர். பள்ளி மேம்பாட்டு திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை 5 ஆண்டுகளில் செயல்படுத்தும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் பள்ளிக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மேலும் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இத்துடன், வரும் நிதி யாண்டில் 15 ஆயிரம் திறன்மிகு வகுப்பறை கள் ரூ.300 கோடியில் உருவாக்கப்படும்.
கோவையில் நவீன நூலகம்
கோவை மாநாகரம் நாட்டிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றா கும். கோவை வாழ் பொதுமக்கள் மற்றும் இளைய தலைமையினரின் அறிவுத் தாகத்தை மேலும் தூண்டும் வகையில் ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கலைஞர் பெயரில் கோவையில் அமைக்கப்படும்.
1000 மாணவர்களுக்கு பயிற்சி
ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள்அதிகம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்க ளுக்கு சென்னை, கோவை, மதுரை மண்ட லங்களில் உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான 6 மாத காலப் பயிற்சி வழங்கப்படும். தமிழ் புதல்வன் திட்டம் ‘தமிழ் புதல்வன்’ திட்டத்திற்கு ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் இந்த திட்டத்தின் மூலம் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மேலும் பாட புத்தகம், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்கள் கல்வியை மெருகேற்ற உதவி செய்யப்படும். 10 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் கடந்த மூன்று ஆண்டுகளில் வெவ்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணி யிடங்களுக்கா இதுரை 27,858 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் 46 காவல் நிலையங்கள் திறக்கப்படும். வரும் ஜூன் மாதத்திற்குள் 10 ஆயிரம் அரசு பணி யிடங்கள் நிரப்பப்படும். இதற்காக அரசு துரித மாக பணிகளை மேற்கொண்டு வருகிறது.