திருநெல்வேலி, டிச.21- பெருமழையால் பேரிழப்பு ஏற் பட்டுள்ள இந்த நேரத்தில் எல்லோரும் சேர்ந்து மக்களை பாதுகாத்து நெருக்க டியில் இருந்து மீட்க வேண்டும். அரசு செயல்படவில்லை என சிலர் அரசியல் நோக்கத்துக்காக பேசுவார்கள்; இது அரசியல் செய்வதற்கு பொருத்தமான விசயம் அல்ல என்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
அதிகனமழையால் கடும் பாதிப்பு அடைந்துள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வெள்ளச் சேதங்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் பார்வையிட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பெருமழையாலும் ஆற்றுவெள்ளம் புகுந்ததாலும் விளைநிலங்கள் மணல் மேடாக மாறியுள்ள முன்னீர்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளை கே.பால கிருஷ்ணன் வியாழனன்று (டிச.21) பார்வையிட்டார். சேதமடைந்த இடங்களை விவசாயிகள் அவரிடம் காண்பித்தனர். சேதமடைந்த பயிர் களுக்கு நிவாரணம் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக அரசு சார்பில் அதிகாரி களும் அமைச்சர்களும் தொடர்ச்சி யாக மீட்பு நிவாரணப் பணிகளில் ஈடு பட்டு வருகிறார்கள். சில பகுதி களுக்கு நிவாரண உதவிகள் சென்றடை யவில்லை என்கிற புகார்கள் வருகின்றன. போதிய போக்கு வரத்து வசதிகள் இல்லாததும் அதற்கு காரணமாக இருக்கக் கூடும். அதுகுறித்து கவனிக்க வேண்டும். மக்களுக்கு மிகவும் சிரமமான நேரம் இது. அப்படி சிரமத்தில் இருக்கும் மக்களுக்கு உரிய முறையில் நிவாரணங்கள் சென்றடைவதை அரசு அதிகாரி கள் உறுதி செய்ய வேண்டும்.
வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சுகாதாரப்பணிகள் மிகமிக அவசியமானது. பெரிய அளவுக்கான தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. வியா பாரிகள், மீனவர்கள், வாகன உரிமையாளர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பு மக்க ளுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை யைவிட கூடுதலாக இவர்களுக் கெல்லாம் நிவாரணம் தேவைப் படும். குறிப்பாக வியாபாரி களுக்கு பல லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதையெல்லாம் அரசு கணக்கெடுத்து அவர்களுக்கு என்ன நிவாரணம் வழங்க முடியும் என்பதை பரிசீலிக்க வேண்டும். அவர்கள் பெற்றுள்ள கடன்களை திருப்பி செலுத்துவதற்கான கால அவ காசம் அளிக்க வேண்டும். இந்த நேரத்தில் எல்லோரும் சேர்ந்து மக்களைப் பாதுகாத்து நெருக்க டியில் இருந்து மீட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநில குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயலாளர். க.ஸ்ரீராம், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மோகன்,பெருமாள் சுடலைராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் டி. நாராயணன், ஜோதி, கு.பழனி, குழந்தைவேலு, கந்தசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
வியாழனன்று மாலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோவில் பள்ளிவிளை, அய்யர் விளை, லோகியா நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கே.பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்கினார்.
அவருடன் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.ஜி.பாஸ்கரன், பி.பூமயில், மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அப்பா துரை, ரவீந்திரன், புவிராஜ், சண்முகராஜ், மாநகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் சங்கரன், மாமன்ற உறுப்பினர் முத்துமாரி, மாவட்டக்குழு, நகர, ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் சென்றனர்.
வெள்ளியன்று முத்தையா புரம், ஸ்ரீவைகுண்டம், சாத்தான் குளம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட உள்ளனர்.