வாச்சாத்தி வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நீதிபதி வேல்முருகன் வழங்கியுள்ளார். 1992ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சந்தனக்கட்டையை தேடுகிறோம் என்ற பெயரில், காவல்துறை, வனத்துறை, வருவாய்த் துறையை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வாச்சாத்தி கிராமத்தை சூறையாடி, 18 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தனர். அப்போதைய அதிமுக ஆட்சி மூடி மறைத்தது. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என அன்றைய முதலமைச்சர் சட்டமன்றத்தில் கூறி னார். மலைமேலே உள்ள கிராமத்திற்கு வய தான ஏ.நல்லசிவன் எப்படி சென்றிருக்க முடியும் என்றெல்லாம் கேள்வி எழுப்பி அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று அப்போதைய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனும் கூறினார். 30 ஆண்டு போராட்டம் வெற்றி அதற்கெதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும் மக்கள் மன்றத்தில் பெரும்போராட்டத்தை நடத்தி யது. அதன்விளைவாக அந்த மக்களுக்கு நீதி கிடைத்துள்ளது. 30 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்திற்கு கிடைத்துள்ள வெற்றியாக இந்த தீர்ப்பைப் பார்க்கிறோம். 2011ஆம் ஆண்டு செப்.29ஆம் தேதி தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம், சிபிஐ-யால் குற்றம்சாட்டப்பட்ட 269 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பை அளித்தது. வாச்சாத்தி சம்பவம் நடந்து 3 ஆண்டுகளுக்கு பிறகுதான் சிபிஐ-யிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. டிஎஸ்பி-யாக இருந்த ஜெகநாதன் தலைமையிலான குழுவினர் மிகச்சிறப்பாக புலன்விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதன்பேரில் அமர்வு நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பளித்தது. உலக வரலாற்றில் ஒரே வழக்கில் இத்தனை பேர் தண்டிக்கப்பட்டது வேறு எந்த வழக்கிலும் இல்லை.
வழக்கறிஞர்களுக்கு நன்றி
இந்த தீர்ப்பு வரும் போது, குற்றவாளிகளில் 54 பேர் இறந்துவிட்டனர். 215 பேரில் 126 பேர் வனத்துறை, 84 பேர் காவல்துறை, 5 பேர் வரு வாய்த்துறையை சார்ந்தவர்களாக இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்துதான் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்தனர். 12 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கை விசாரித்து, அதே செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை திறமையாக நடத்திய சிபிஎம் வழக்கறி ஞர்குழுவை சார்ந்த என்.ஜி.ஆர்.பிரசாத், ஆர்.வைகை, கே.இளங்கோ, சம்கிராஜ், சுப்புராம், மத்திய குற்றப்புலனாய்வுக்கழக ( சிபிஐ) வழக்கறிஞர் அட்வகேட் ஜென்ரல் ஜெயபாலன் அனைவருக்கும் நன்றி.
அரசுக்கு வேண்டுகோள்
வாச்சாத்தி கிராமத்தில் நலத்திட்டங்கள் எவை, என்னென்ன செய்யப் போகிறது என்பது குறத்து தமிழ்நாடு அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இத னால் பொருளாதார ரீதியாக, வளர்ச்சியை நோக்கி அந்த கிராமத்தை அழைத்துச் செல்லும். அந்த கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தமிழ்நாடு அரசுக்கு விரிவான அறிக்கை ஒன்றை கொடுப்போம். இந்த தீர்ப்பின்படி மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பாளர், வன அலுவலர் ஆகியோர் மீது அரசு காலதாமதமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணத்தை காலதாமதமின்றி வழங்க வேண்டும். 30 ஆண்டுகளாக காத்துக்கிடக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை துரிதமாக வழங்க வேண்டும். இறுதியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில், அரசு இதில் மேலும் காலதாமதம் செய்யாமல், அனைத்து பணிகளையும் விரைந்து செய்ய வேண்டும். எவ்வளவு பெரிய உயரதிகாரியாக இருந்தா லும் தண்டனை பெற்றுத்தர முடியும் என்ற நம்பிக்கையை இந்த தீர்ப்பின் மூலம் மக்களுக்கு பெற்றுத்தந்துள்ளோம். பாதிக்கப்பட்ட மக்கள் உறுதியாக போராடினால், நீதியை நிலை நாட்ட முடியும் என்பதற்கு வாச்சாத்தி வழக்கு மிகச்சிறந்த உதாரணம் என்பதை நிரூபித்துள் ளோம்.