சென்னை, அக். 12 - உண்மையை பேசும் ஊட கங்களுக்கு எதிரான ஒன்றிய பாஜக அரசின் எதேச்சதி காரத்தை ஒன்றுபட்டு முறி யடிப்போம் என்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்கள் சூளுரைத்த னர். ஒன்றிய அரசை விமர்சித்து செய்திகளை வெளியிட்ட தற்காக, ‘நியூஸ் கிளிக்’ ஊடகம் மீது மோடி அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்குமுறையைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் சென் னையில் புதனன்று மாபெரும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திமுக தலைமைக்கழக செய்தித் தொடர்புக்குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், மதிமுக பொருளாளர் மு. செந்திலதிபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச்செயலாளர் மு. வீரபாண்டியன் மற்றும் ஹைசர் முகமது (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்), இளஞ் சேகுவேரா (விசிக), மூத்த பத்தி ரிகையாளர்கள் நக்கீரன் கோபால், கவிதா முரளிதரன், சபீர் அகமது (நியூஸ் மிண்ட்) பி.எஸ்.டி. புருஷோத்தமன்(தமி ழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் - டியுஜெ) , ஹாசிப் (மாற்றத்திற்கான ஊடகவியலா ளர் மன்றம்), வி. மணிமாறன் (மெட்ராஸ் யூனியன் ஆப் ஜெர்ன லிஸ்ட்), டி.எஸ்.ஆர். சுபாஷ் (டியுஜெ) ஆகியோர் கண்டன உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் வி.பி. நாகை மாலி, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை, மாநிலக்குழு உறுப்பினர்கள் எம். ராமகிருஷ்ணன், வெ. ராஜசேக ரன், மாவட்டச் செயலாளர்கள் ஆர். வேல்முருகன் (தென் சென்னை), ஜி. செல்வா (மத்திய சென்னை),ஜோதி ராமலிங்கம் (தமிழ்நாடு பத்திரிகை புகைப் படக் கலைஞர்கள் சங்கம்), பாரதி தமிழன் (சென்னை பத்திரிகை யாளர் மன்றம்), தஞ்சை தமிழ் பித்தன் (தமிழ்நாடு ரிப்போர்ட்ட ர்ஸ் அசோசியேஷன்), டில்லிபாபு (தமிழ்நாடு உழைக்கும் பத்தி ரிகையாளர் சங்கம்), பிரபுதாசன் (தொலைக்காட்சி செய்தி வாசிப் பாளர்கள் சங்கம்), சி.கருணா கரன் (சமத்துவக் குரல்) உள்ளிட்ட மூத்த பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், பத்திரிகை மற்றும் ஊடக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
‘நக்கீரன்’ கோபால்
இந்த ஆர்ப்பாட்டத்தில் மூத்த பத்திரிகையாளர் ‘நக்கீரன்’ கோபால் பேசுகையில், “’நியூஸ் கிளிக்’ ஊடகத்தின் மீதான தாக்கு தல் என்பது மற்ற நிறுவனங் களுக்கு விடுக்கப்படும் எச்ச ரிக்கை என்பதை மறந்து விடக் கூடாது. பத்திரிகையாளர்கள் பாதிக்கப்படும் போது, பத்திரி கையாளர் சங்கங்கள் போராடும். ஆனால் பத்திரிகையாளர்கள், ஊடகத்தின் மீதான தாக்கு தலுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அனைத்து அர சியல் கட்சியினரையும், பத்திரி கையாளர் சங்கங்களையும் ஒருங் கிணைத்து போராட்டத்தை முன் னெடுத்திருக்கிறது. அனைத்து பத்திரிகையாளர்கள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி க்கு நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன்” என்று கூறினார். மேலும், “பத்திரிகையாளர் கள் வெடிகுண்டு வீசுவதில்லை யாரையும் கொலை செய்வதி ல்லை. அப்படி இருக்கும் போது பத்திரிகையாளர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிய வேண்டி யதன் அவசியம் என்ன? பத்திரி கையாளர் உண்மையை வெளி யிடக் கூடாது, தங்களின், எதேச் சதிகாரப் போக்கை மக்களிடம் அம்பலப்படுத்திவிடக் கூடாது என்பதுதான் அவர்களின் (ஒன்றிய ஆட்சியாளர்களின்) நோக்கம். அவர்களின் இந்த சர்வாதிகார போக்கை ஒன்றுபட்டு முறியடிப்போம்” என்று கூறி னார். மேலும், “பத்திரிகையா ளர்கள் பாஜக-வின் செய்தி களை புறக்கணிக்க முன்வர வேண்டும்” என்றும் ‘நக்கீரன்’ கோபால் கேட்டுக் கொண்டார்.
கவிதா முரளிதரன்
பத்திரிகையாளர் கவிதா முர ளிதரன் பேசுகையில், “’நியூஸ் கிளிக்’ நிறுவனத்தில் அரசின் 5-ஆவது அமைப்பான சிபிஐ புத னன்று (அக். 11) மீண்டும் சோதனை நடத்தியிருக்கிறது. 2021-இல் அமலாக்கத்துறை சோதனை நடத்தும் போது, அதன் ஆசிரியர் தில்லி உயர் நீதி மன்றத்தை அணுகி, சீன நிதி விஷ யத்தில் தன்னை கைது செய்யக் கூடாது என நீதிமன்ற பாது காப்பை பெற்றுள்ளார். எனவே, தற்போது ‘உபா’ என்ற கொடூர மான சட்டத்தைப் பயன்படுத்தி அவரை கைது செய்துள்ளனர்” என்பதை குறிப்பிட்டு, “இந்த சட்டத் தின் கீழ் கைது செய்வதென்றால், ‘ஏன் கைது செய்கிறோம்’ என்ற காரணத்தை முதலில் கூற வேண்டிய அவசியம் இல்லை” என்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், “இந்த சோதனை யின் போது 300-க்கும் மேற்பட்ட லேப்டாப் உள்ளிட்ட பொருட் களை எடுத்துச் சென்றுள்ளனர்” என்பதைக் குறிப்பிட்ட கவிதா முரளிதரன், “பீமா கோரேகான் வழக்கில், இதுபோன்ற லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை கைப் பற்றி, இரண்டு செயல்பாட்டா ளர்களை வழக்கில் சிக்க வைக்கும் வகையில், போலீசாரே அந்த லேப்டாப்களில் ஆதா ரங்களை விதைத்தார்கள்.
இது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப் பட்டது. அதுபோல் திணித்தல் சம்பவம் ‘நியூஸ் கிளிக்’ ஊடக நிறுவனத்தின் மீதும் நடக்கக் கூடும். இதையெல்லாம் பார்க் கும் போது, வழக்கை விசாரிப்ப வர்களே அந்த நிறுவனத்திற்கு எதிராக ஆதாரங்களை உரு வாக்குவார்கள் என்றால், நினை த்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது” என்றார். “அமெரிக்காவைச் சேர்ந்த நெவில் ராய் சிங்கம் என்பவர் மூலம்தான் சீனாவின் நிதி இந்த நிறுவனத்திற்கு வந்துள்ளதாக குற்றச்சாட்டு. ஆனால் ராய் சிங்கம் என்பவரின் வழக்கறிஞர், இந்த பணம் எதுவும் சீனாவில் இருந்து வந்ததில்லை என தெரிவித்துள்ளார். அதேபோல ‘நியூஸ் கிளிக்’கானது, அவர் களுக்கு வந்த நிதியை பயன் படுத்தி அரசுக்கு எதிரான சதி களை செய்தார்கள், தேசத்து ரோக செயல்களில் ஈடுபட்டார் கள் என்பதுதான் அரசின் குற்றச் சாட்டு. ஆனால் அதுபோன்ற எந்த செய்தியோ, கட்டுரைகளோ இதுவரை ‘நியூஸ் கிளிக்’கில் வெளியிடப்பட்டது இல்லை” என்பதை குறிப்பிட்ட கவிதா முர ளிதரன், “நியூஸ் கிளிக்’ போன்ற ஊடகத்தை அச்சுறுத்துவது என்பது, அனைத்து ஊடகத்திற் கும், பத்திரிகைகளுக்கும், பத்திரி கையாளருக்குமான மிரட்டல். அதை முறியடிக்கும் போராட்ட மாகவே இன்றைய போராட்ட த்தை கருதுகிறேன். போராட்ட த்தை முன்னெடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றி” என்று தெரிவித்தார். முன்னதாக கட்சியின் வட சென்னை மாவட்டச் செயலாளர் எல். சுந்தரராஜன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். லோகநாதன் நன்றி கூறி னார்.