புதுதில்லி, ஜுன் 5- மணிப்பூர் கலவரத்தில், ஏற்கனவே அழிக்கப்பட்ட குக்கி இன மக்களின் கிறித்தவ தேவாலயங்கள் தவிர, மெய்த்தி இன கிறித்தவர்களின் 247 தேவாலயங்களும் அழிக்கப்பட்டதாக பிரபல பத்திரிகையாளர் ஆண்டோ அக்காரா தெரிவித்துள்ளார். மே 3 அன்று கலவரம் வெடித்த 36 மணி நேரத்திற்குள், இவற்றில் பல தேவாலயங்களும் அழிக்கப்பட்ட தாகவும், மணிப்பூர் சென்றிருந்த பிரபல பத்திரிகையாளர் ஆண்டோ அக்காரா, ‘தேசாபிமானி’ செய்தியாள ரிடம் கூறியுள்ளார். தேவாலயங்கள் அழிக்கப்பட்டது, கலவரத்தின் பின்னணியில் சங்பரிவார் இருந்தது என் பதற்கு சான்றாகும். 2008 இல் ஒடிசா வின் காந்தமாலில் அமல்படுத்தப்பட்ட முறையைப் போன்றே மணிப்பூரிலும் கடைப்பிடித்ததை அவர் சுட்டிக்காட்டி யுள்ளார். அழிக்கப்பட்ட தேவாலயங்களின் நிர்வாகிகளிடமிருந்து ‘இனி திரும்பி வரப் போவதில்லை’ என்று இந்துத் துவா கும்பல்கள் கடிதம் பெற்றுள்ள னர். சம்பவம் வெளியே வராமல் இருக்கும் வகையில் மூடி மறைக்கும் வேலைகளும் நடந்துள்ளன. மெய்த்தி பிரிவினர் எந்த கிறிஸ்தவர்களையும் உடல் ரீதியாக தாக்கவில்லை. அதே சமயம், தேவாலயம் இடிக்கப்பட்ட தற்கு எதிராக காவல்துறையில் அளிக்கப் பட்ட புகார் எதுவும் ஏற்கப்படவில்லை. புகார் அளித்தவர்கள் மிரட்டப்பட்டனர். மணிப்பூரில் கிறித்தவ தேவாலயங் களின் பங்கேற்புடன் நடந்த கலவரம் என ஆர்எஸ்எஸ் பத்திரிகையான ‘ஆர்கனைசர்’ திட்டமிட்டு பொய்ப்பிர ச்சாரம் மேற்கொண்டுள் ளது எனவும் ஆண்டோ அக்காரா தெரிவித்தார்.
குக்கி மலைவாழ் மக்கள் பொது வாக கிறிஸ்தவர்கள். இனக்கலவ ரத்தின் போது குக்கி பிரிவினரின் தேவா லயங்கள் மட்டுமே அழிக்கப்பட்டதாக வெளியாகும் பிரச்சாரம் ஆதார மற்றது. மணிப்பூரின் மொத்த மக்கள் தொகையில் 53 சதவிகிதமானோர் மெய்த்திஸ் இனத்தவர். இவர்களில் சுமார் 200,000 கிறிஸ்தவர்கள் உள்ள னர். பெரும்பாலான மெய்த்தி இன மக்கள் இம்பால் பள்ளத்தாக்கில் வாழ் கின்றனர். பா.ஜ.க.வின் ஆசியுடன், ‘ஆரம்பை தெங்கோல்’ மற்றும் ‘மைதீ லீபுன்’ ஆகிய இரண்டு இந்துத்துவா அமைப்புகள், சமீபகாலமாக மெய்த்தீஸ் மக்கள் மத்தியில் தங்கள் செயல்பாடு களை தீவிரப்படுத்தியுள்ளன. பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மன்னருமான லீஷெம்பா சனாஜோபாவின் ஆதர வின் கீழ் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கம் ‘ஆரம்பை’ ஆகும். அவர்கள் கருப்பு சீருடை அணிவர். இந்த அமைப்பில் சுமார் இரண்டாயிரம் பேர் செயல்பட்டு வருகின்றனர். கலவரத்தின் தொடக்கத்தில் இம்பாலில் உள்ள போலீஸ் ஆயுதக் கிடங்குகளில் இருந்து நூற்றுக்கணக்கான துப்பாக்கிகளை கொள்ளையடித்தது யார் என்ற கேள்வி களுக்கும் அரசாங்கம் பதிலளிக்க வில்லை என ஆண்டோ அக்காரா தெரிவித்துள்ளார்.