states

பிரதமர் மோடி, ஆதித்யநாத் படங்களை குப்பை வண்டியில் எடுத்துச் சென்றாராம்!

மதுரா, ஜூலை 18 - பிரதமர் மோடி, உ.பி முதல்வர் ஆதித்யநாத்தின் புகைப்படங்களை குப்பை வண்டியில் எடுத்துச் சென்ற குற்றச்சாட்டின் பேரில், மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளியின் வேலை பறிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவின் நிகாமில், மாநகராட்சி தொழிலாளி ஒருவர், குப்பை வண்டியைத் தள்ளிக்கொண்டு செல்வது போலவும், அப்போது, அந்த குப்பை வண்டிக்குள் பிரதமர் நரேந்திர மோடி, உ.பி. முதல்வர் ஆதித்ய நாத் மற்றும் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் ஆகி யோரின் உடைந்து போன புகைப்படங்கள் இருப்பதையும் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். மேலும் அந்த வீடியோவில், பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் ஆதித்ய நாத்தின் புகைப்படங்கள் குப்பை வண்டிக்குள் வந்தது குறித்து சம்பந்தப் பட்ட தொழிலாளியிடம் ஒரு கூட்டம் விசாரிக்கிறது. “எனக்கும், இதற்கும் சம்மந்தமில்லை.

இவை குப்பையில் கிடந்தன. அதனால் நான் அவற்றை குப்பை வண்டியில் எடுத்து அப்புறப்படுத்தக் கொண்டு செல்கிறேன்” என்று அந்த தொழிலாளி பதில் கூறுகிறார்.  இதையடுத்து, வண்டியை மறித்த அந்த நபர்கள் மோடி, ஆதித்ய நாத் புகைப்படங்களை எடுத்து தண்ணீரால் கழுவுகின்றனர். பின்னர், “இந்த புகைப்படங்களை நாங்களே கொண்டு செல்கிறோம்... மோடியும், யோகியும் இந்த நாட்டின் ஆன்மாக்களாக இருப்பவர்கள்” என்று கூறிவிட்டு அந்த இடத்திலிருந்து நகர்கின்றனர். பாஜக-வினர் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பியதுடன், சம்பந்தப்பட்ட தொழிலா ளியை தண்டிக்க வேண்டும் என்று கூப்பாடு போட்டு வந்தனர். இதை யடுத்து, சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஒப்பந்தத் துப்புரவுத் தொழிலாளி தற்போது பணியிலிருந்து நீக்கி, மதுரா-பிருந்தாவனின் கூடுதல் நகராட்சி ஆணையர் சத்யேந்திர குமார் திவாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.