ராஞ்சி, நவ. 18 - தனது ஆட்சியைக் கவிழ்ப்ப தற்காக, பாஜகவினர் சதித்திட்ட த்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் நீர்மூழ்கிக் கப்பலைப் போல மறைமுகமாக வேலை பார்த்து வருவதாகவும் ஜார்க் கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங் கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரு கிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வ ராக இருக்கிறார். இந்த ஆட்சி யைக் கவிழ்ப்பதற்கு பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. நிலக்கரி சுரங்கத்துறையில் ஊழல் செய்து அதன் மூலம் ரூ. 1,000 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டியதாக முதல்வர் ஹேமந்த் சோரன் மீது குற்றம் சாட்டியது. தேர்தல் ஆணையத்திற்கும் புகார் மனு அனுப்பியது. தேர்தல் ஆணை யமும், இதுகுறித்து விசாரித்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ல் பிரிவு 9-ஏ மீறப்பட்டிருப்ப தாகக்கூறி ஹேமந்த் சோரனை எம்எல்ஏ பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரைத்திருந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காத நிலையில், ஆளும் கட்சி எம்எல்ஏ-க்களையே சோரனுக்கு எதிராக கலகத்தில் ஈடுபடுத்த திட்டமிட்டது. இதை யடுத்து ஹேமந்த் சோரன் தானா கவே முன்வந்து, சட்டப்பேரவை யில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, அதில் தனக்குள்ள பெரும் பான்மையை நிரூபித்தார். எனினும், நிலக்கரி சுரங்க ஒதுக் கீட்டு வழக்கில் ஹேமந்த் சோ ரனுக்கு அடுத்தடுத்து சம்மன்களை அனுப்பி அமலாக்கத்துறை மூலம் குடைச்சல் கொடுத்து வரு கிறது. ஹேமந்த் சோரனின் உதவி யாளர்கள் பச்சு யாதவ் மற்றும் பிரேம் பிரகாஷ் ஆகியோரையும் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
ஒன்றிய பாஜக அரசின் இந்த நடவடிக்கைகள், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை கொந்தளிக்க வைத்துள்ளது. கட்சித் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “நான் ரூ. 1000 கோடி ஊழல் செய்துள்ளதாக கூறுகிறார்கள். ரூ. 1,000 கோடி அளவில் மோசடி செய்ய வேண்டும் எனில் அதற்கு தற்போது உள்ள சுரங்கத்தை விட நான்கு மடங்கு பெரிய நிலக்கரி சுரங்கம் தேவைப்படும். தற்போதுள்ள சுரங்கத்திலிருந்து ரூ. 750 கோடிதான் அரசுக்கு வரு மானம் கிடைக்கிறது. எனவே இதை விட பெரிய சுரங்கம் எதுவும் இங்கு கிடையாது. சரி அவர்கள் சொல்வதைப் போல பெரிய சுரங்கம் இருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும் அதிலிருந்து நிலக்கரியை கொண்டு செல்வற்கு 20 ஆயி ரம் ரயில்வே ரேக்குகள் தேவைப் படும்; அல்லது 33 லட்சம் லாரிகள் தேவைப்படும். இந்த அளவு நிலக் கரிகளை முறையான ஆவணங்கள் இன்றி ரயில்வே துறை கொண்டு செல்லாது. அவ்வாறு கொண்டு செல்லப்பட்டது என்றால், எந்த ரயில்வே அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? நான் முதலமைச்சராக அர சியல் சாசன பதவி வகிக்கிறேன். ஆனால் விசாரணை நடக்கும் விதம், விசாரணைக்கு நான் அழைக்கப்பட்ட விதம் என எல்லா வற்றையும் பார்க்கும்போது நாட்டை விட்டு தப்பியோடுபவர் களை அணுகுவதை போல இருக்கிறது. எனக்கு தெரிந்து தொழிலதிபர்கள்தான் நாட்டை விட்டு ஓடியுள்ளார்களே தவிர அரசியல்வாதிகள் அல்ல. கடந்த 2019 முதலே சதிகாரர்கள் எனது ஆட்சியை கவிழ்க்க நீர்மூழ்கிக் கப்பலைப் போல வேலை செய்துகொண்டிருக் கிறார்கள். ஆனால் அவர்கள் வெளி யில் தலைகாட்ட பயந்தார்கள். தற்போது அவர்கள் வெளிப்படை யாகவே வருகிறார்கள்.” இவ்வாறு ஹேமந்த் சோரன் பேசியுள்ளார்.