states

எங்கள் எய்ம்ஸ் எங்கே?

சென்னை,ஜன.12- “எங்கள் எய்ம்ஸ் எங்கே”? என்ற முழக்கத்தோடு ஜனவரி 24 அன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் பெருந்திரள் போராட்டத்தில் ஈடுபடுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் ஜனவரி 11 அன்று  சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி களை உடனடியாக துவக்க வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதன் அடையாளமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிக்கு எந்தவித  நியாயமும் இன்று வரை வழங்காமல் இருக்கிறது. 2019ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையோடு அறிவிக்கப்பட்ட மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டு செயல்பட்டு வரும்  நிலையில், மதுரை எய்ம்ஸ் பணிகள் இன்று வரை துவக்கப்படாமல் இருக்கிறது.

இதற்கு ஒன்றிய அரசினுடைய அக்கறை யின்மையும், மாற்றாந்தாய் மனப் போக்குமே அடிப்படை காரணமாகும். எனவே, மதுரை எய்ம்ஸ் பணிகளை உடனடியாக துவக்கக் கோரி வரும் ஜனவரி 24 அன்று காலை 10 மணிக்கு மதுரை  நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் மதுரையில் தென் மாவட்டங்களைத் திரட்டி “எங்கள் எய்ம்ஸ்  எங்கே” என்ற முழக்கத்தோடு “கைகளில் செங்கல் ஏந்தி” பெருந்திரள் போராட்டம் நடைபெறுகிறது.  இப்போராட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலை வர்களும் கலந்து கொள்கின்றனர். ஒன்றிய அரசினை கண்டித்து நடைபெறும் இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பு  பொதுமக்களும், ஜனநாயக இயக்கங் களும் கலந்து கொண்டு பேராதரவு தர வேண்டும். இவ்வாறு கட்சியின் மாநிலக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.