சென்னை, மே 13- தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்க ளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சனிக்கிழ மையன்று (மே.14) அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், தர்மபுரி, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்க ளில் கன முதல் மிக கன மழையும், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணா மலை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும்.