states

ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்ட மசோதா: மீண்டும் சட்டப்பேரவையில் இன்று தாக்கலாகிறது

சென்னை, மார்ச் 22- ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா வியாழனன்று(மார்ச் 23) சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்து, கடந்த அதிமுக ஆட்சியில்  சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து  செய்தது. பின்னர் திமுக அரசு கொண்டு  வந்த ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதாவுக்கு கடந்த ஆண்டு அக்.1 அன்று  ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்  அளித்தார். இதையடுத்து, அக். 19 ஆம் தேதி  சட்டப்பேரவையில், ஆன்லைன்  சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும்  மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பிவைக்கப் பட்டது. இது தொடர்பாக ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு தமிழ்நாடு அரசு பதில் அளித்தது. சில மாதங்க ளாக மசோதாவை கிடப்பில் போட்டு வைத்திருந்த நிலையில், கடந்த 8 ஆம்  தேதி அந்த மசோதாவை ஆளுநர்  திருப்பி அனுப்பினார். இந்த மசோ தாவை நிறைவேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறும்போது, ‘‘ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்ற, தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகா ரம் உள்ளது. வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மீண்டும் மசோதாவை நிறைவேற்றி, ஆளு நருக்கு அனுப்புவோம். இரண்டாவது முறையாக அனுப்பும்போது, அதை ஆளுநர் நிராகரிக்க வாய்ப்பில்லை’’ என்று தெரிவித்தார். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட  தடை சட்ட மசோதா வியாழனன்று (மார்ச் 23) சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும், ஆளுநர் எழுப்பிய கேள்விகள் மற்றும் அரசு அளித்த பதில்களையும் பேரவையில் விளக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.