சென்னை, நவ. 4- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் வேலை செய்த பயனாளிகளுக்கு நான்கு மாதங்களைக் கடந்தும் சம்பளம் வழங்காமல் மோடி ஆட்சியில் திட்டத்தின் பயனாளிகள் துய ரத்தில் தள்ளப்பட்டுள்ளனர். இதைக் கண் டித்தும் சம்பள பாக்கியை உடன் வழங்க கோரியும் வரும் நவம்பர் 6 அன்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழு வதும் ஒப்பாரிப் போராட்டத்தை நடத்திட மாநில நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. விவசாய வேலை முறைகளில் எந்திர மயமாக்கல் தீவிர ப்படுத்தப்பட்டுள்ள தால் கிராமப்புற விவசாயத் தொழிலா ளர்கள் 100 சதவீதம் வேலை இழந்துள்ள னர். அவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் தின் மூலம் ஆண்டிற்கு நூறு நாட்கள் வேலை வழங்கி ஓரளவிற்கு வேலை யின்மை நெருக்கடியில் இருந்து பாது காக்க முடியும். ஆனால் ஒன்றிய பாஜக அரசு பொறுப்பேற்ற காலம் முதல் திட்டத்தை வேண்டா வெறுப்பாக செயல் படுத்தி வருகிறது. நாடு முழுவதும் வேலை அட்டைப் பெற்றுள்ள 14 கோடி பேருக்கு 2.64 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் படிப் படியாக அதற்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்து நடப்பாண்டில் வெறும் 60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்தது. அப்பொழுது அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், பொருளாதார அறிஞர்கள் திட்டத்திற்கு கூடுதலான நிதியை ஒதுக்கீடு செய்திட வேண்டும். இந்த நிதியை வைத்து 15 நாள் 20 நாட்கள் மட்டுமே வேலை வழங்க முடியும் என்று சுட்டிக்காட்டப் பட்டது. ஆனால் ஒன்றிய மோடி அரசு அதற்கு செவி சாய்க்காமல் அலட்சியப் படுத்தியது.
ஒதுக்கிய நிதியையும் விடுவிக்காத ஒன்றிய அரசு
கடந்த நான்கு மாதமாக வேலை செய்த பயனாளிகளுக்கு விடுவிக்க வேண்டிய 17 ஆயிரம் கோடி சம்பள பாக்கியை ஒன்றிய அரசு விடுவிக்காமல் முற்றிலும் கருணையற்ற முறையில் நடந்து வருகிறது. வேலை செய்த கிரா மப்புற ஏழை எளிய மக்கள் வங்கிகளுக்கு சம்பளம் ஏறும் ஏறும் என நடையாய் நடந்து அல்லல்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் விவசாயப் பணிகள் மூலம் கிடைக்க வேண்டிய வேலை நாட்கள் முற்றிலும் இல்லாமல் போய் விட்ட நிலையில், ஊரக வேலைத்திட்ட வேலையையும் அதிலிருந்து கிடைக்கும் சிறிய தொகையையும் நம்பி கிராமப்புற மக்களின் வாழ்க்கை இருக்கிறது. ஊரக வேலைத் திட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து வேலை செய்த கிரா மப்புற ஏழைகளுக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி 2696 கோடி ரூபாயை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. இன்னும் சில தினங்களில் தீபாவளி பண்டிகை கொண்டாட வேண்டிய நிலை யில் வேலை செய்த தொழிலாளர்கள் சம்பளப் பாக்கியை எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட இயக்கங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக சம்பளத்தை விடுவிக்கக் கோரி நடத்தும் போராட்டங்களுக்கும் செவிமடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை அகில இந்திய விவசா யத் தொழிலாளர்கள் சங்கம் வன்மை யாகக் கண்டிக்கிறது. பண்டிகை காலம் என்பதை கவ னத்தில் கொண்டு உடனடியாக ஊரக வேலை திட்ட பயனாளிகளின் சம்பள நிலுவைபாக்கியை விடுவிக்க வேண்டும். கார்ப்பரேட்டுகளின் கண்ணசைவு களில் ஊக்கத்தொகை, வரா கடன் தள்ளு படி என ரூ.25 லட்சம் கோடியை வாரி இறைத்துள்ள மோடி அரசு, கிராமப்புற மக்களின் உழைப்பை உதாசீனப்படுத்தி ஊதியத்தை வழங்காமல் இழுத்தடிப்ப தை கண்டித்தும் உடனடியாக ஊரக வேலை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஊதியத்தை வரவு வைக்க கோரியும் தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் மோடி அரசின் விளிம்பு நிலை மக்கள் விரோதச் செயலை கண்டித்து வரும் நவம்பர் 6 அன்று ஆயிரக்கணக்கில் விவசாய தொழிலாளர்கள் திரண்டு ஒப்பாரி போராட்டத்தை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் எம். சின்னதுரை எம்எல்ஏ தலைமை வகித்தார். அகில இந்திய இணைச் செயலாளர் பி. சிவதாசன் எம் பி, அகில இந்திய துணைத் தலை வர் ஏ. லாசர் முன்னாள் எம்எல்ஏ, மாநில பொதுச்செயலாளர் வி. அமிர்த லிங்கம்,பொருளாளர் அ.பழனிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.