சென்னை, செப். 1- நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை (செப். 1) அதிகாலை முதல் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் மொத்தமுள்ள 63 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இரண்டு பிரிவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்கச்சாவடிக ளுக்கும், செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச் சாவடிகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டி சுங்கச் சாவடி, திருச்சி மாவட்டம் வாழவந்தான் கோட்டை சுங்கச் சாவடி, மதுரை அருப்புக் கோட்டை சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச் சாவடி உள்ளிட்ட 26 சுங்கச் சாவடிக ளில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து சுங்கச்சாவடிகளிலும் குறைந்தது 5 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை சுங்கக் கட்ட ணம் அதிகரித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் 15 ஆண்டுகள் அல்லது சாலை அமைத்த முதலீடு திரும்பப் பெறும் வரை கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், அதன்பிறகு 40 விழுக்காடு சாலை பராம ரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளன. ஆனால், ஆண்டுதோறும் சுங்க கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கமாக இருந்து வரு கிறது. மேலும், 60 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள வானகரம், சூரப்பட்டு, பரனூர், ஆத்தூர், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, வாணி யம்பாடி உட்பட 22 சுங்கச்சாவடிகள் அகற்றப் பட வேண்டும், ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முறையான பராமரிப்பு இல்லாத நெடுஞ்சாலைக்கு கட்டண உயர்வு தேவையா என்று வாகன ஓட்டிகளும் பொது மக்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்க ளின் விலை, பேருந்து கட்டணம் கடுமை யாக உயரும் என்றும், இது சாதாரண மக்களுக்கு மேலும் சுமையை உருவாக்கும் என்றும் தெரிவித்தனர். தென் மாநிலங்களில் உள்ள 5 சுங்கச் சாவடிகளில் நடந்த கட்டண வசூலில் ரூ.132 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக சிஏஜி அறிக்கை அண்மையில் அம்பலப் படுத்தியது குறிப்பிடத்தக்கது.