பெரம்பலூர், டிச.24- தந்தை பெரியார் அவர்களின் 43-ஆவது நினைவு தினத்தையொட்டி பெரம்பலூர் பழைய பேருந்து நிலை யம் அருகிலுள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களி டம் தெரிவித்ததாவது: தமிழ்ச் சமூகத்தில் சாதிய ஏற்றத் தாழ்வுகள் இருக்கக்கூடாது. சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும், ஆணாதிக்கம் ஒழிக்கப்பட்டு பெண் சமூகத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண் டும், இப்படிப்பட்ட கொள்கைகள் மட்டு மல்லாமல், பகுத்தறிவு கொள்கை களை பட்டி தொட்டியெல்லாம் பிரச்சா ரம் செய்தவர் தந்தை பெரியார். இன்று அவருடைய 43-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிற இத்தருணத்தில் வேறு பல மாநி லங்களில் நிறைவேற்றியிருக்கிறது போல தமிழக சட்டமன்றத்திலும் பகுத் தறிவுக் கொள்கைகளை நிலை நிறுத்து கிற சட்டத்தை நிறைவேற்றிட வேண் டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமல்லாமல் சாதி ஒழிப்பு சாதி மறுப்பு திருமணங்கள் நடைபெறு கிற போது, ஆணவக்கொலைகள் தமி ழகத்திலே அடுக்கடுக்காக தொடர் கிற சம்பவமாக தமிழ்நாட்டிலே இருக்கி றது. எனவே சாதி ஆணவக் கொலை களை தடுப்பதற்கான தனி சட்டம் நிறை வேற்ற வேண்டும் என்பதையும் பெரி யார் நினைவு தினத்திலே என்னுடைய வேண்டுகோளாக வைக்க கட மைப்பட்டுள்ளேன் எனவும் தெரிவித் தார். மாநிலக்குழு உறுப்பினர் சாமி. நடராஜன், பெரம்பலூர் மாவட்டச் செய லாளர் பெ.ரமேஷ் ஒன்றிய செயலா ளர் எம்.கருணாநிதி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ். அகஸ்டின், அ.கலையரசி, ரெங்க நாதன், ஆர்.கோகுலகிருஷ்ணன் மற் றும் கே.எம்.சக்திவேல், எஸ்.கே.சர வணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.