states

குடியுரிமை கிடைக்காத 800 இந்துக்கள் பாகிஸ்தானுக்கே திரும்பினர்!

ஜோத்பூர், மே 9 - இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்த 800 இந்துக்கள், குடியுரிமை கிடைக்காததால் மீண்டும் பாகிஸ்தானுக்கே திரும்பியுள்ளதாக பாகிஸ்தான் இந்துக்களுக்காக குரல் கொடுத்து வரும் ‘சீமந்த் லோக் சங்கதன்’ (Seemant Lok  Sangathan -SLS) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் இந்துக்கள் சுமார் 25 ஆயிரம்  பேர் ராஜஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியுள்ளனர். அவர்களில் பெரும் பாலானோர் 2018-ஆம் ஆண்டு முதல் இந்திய குடியுரிமைக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்  பங்களை அளித்து வந்துள்ளனர்.  மோடி அரசானது, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, மத அடிப்படையில் குடியுரிமைத் திருத்  தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதில், இந்தி யக் குடியுரிமை பெறுவதற்குத் தகுதிபெற 11 ஆண்டுகள் என்று இருந்த காலத் தேவையை  5 ஆண்டுகளாக குறைத்தது. இதனடிப்படையில் கட்டாயமாக தங்களுக்கு இந்தியக் குடியுரிமை  கிடைத்து விடும் என்றும் அவர்கள் நம்பிக்கை யுடன் இருந்துள்ளனர். இந்தியக் குடியுரிமை கிடைத்துவிடும் என்ற  நம்பிக்கையில், பாகிஸ்தான் பாஸ்போர்ட் காலா வதியானதைப் பற்றிக் கூட அவர்கள் கவலை கொள்ளவில்லை. 

ஆனால் ஒருகட்டத்தில், தங்கள் குடியுரிமை விண்ணப்பத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதைக் கண்டறிந்த அவர்கள், வேறு வழியில்லாமல் சுமார் 800 பேர் சொந்த நாட்டிற்கே திரும்பியுள்ளனர்.  முன்னதாக தங்களின் பாஸ்போர்ட்டுகளை புதுப்பிக்க தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூத ரகத்திற்கு அவசர அவசரமாக விண்ணப்பங்  களை அளித்துள்ளனர். இவ்வாறு பாஸ் போர்ட்களை புதுப்பிக்க நபர் ஒன்றுக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் வரை செலவிட்டுள்ளனர். 10 பேர் உள்ள குடும்பங்கள் 1 லட்சம் ரூபாய்  வரை செலவிட்டுள்ளனர். அதைத்தொடர்ந்தே, தற்போது 800 பேர் வரை பாகிஸ்தானுக்கே திரும்பியுள்ளனர். இதனை ஜோத்பூரில் அளித்த பேட்டியில்,  ‘சீமந்த் லோக் சங்கதன்’ அமைப்பின் தலை வரான இந்து சிங் சோதா தெரிவித்துள்ளார். ஆன்லைனில் விண்ணப்பிப்பதைத் தவிர,  விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆவணங்களை இயற்பியல் முறையில் ஆட்சியர்களிடம் சமர்ப்  பிக்க வேண்டும் என்பது போன்ற இந்திய அர சின் விதிமுறைகள் பாகிஸ்தான் இந்துக்களுக்கு கூடுதல் சுமையாகி விட்டதாக சோதா தெரி வித்துள்ளார். மேலும், சொந்த நாட்டிற்கே திரும்பிய இந்துக்களை, இந்தியாவுக்கு எதிராக பேச வைத்து, அவற்றை பாகிஸ்தான் ஊடகங்கள் ஒளிபரப்புவதாகவும், நாடு திரும்பிய இந்துக் களும், இந்தியாவில் தாங்கள் மோசமாக நடத்தப்பட்டதை வேதனையுடன் தெரிவித்து வரு வதாகவும் சோதா குறிப்பிட்டுள்ளார்.