மதுரை, டிச.31- மதுரை, ஆரப்பாளையம், வெள்ளிவீதி யார் பள்ளியில் சட்டமன்ற தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன் வாடி கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி சனிக் கிழமையன்று நடைபெற்றது. இதில், மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ். அனிஸ் சேகர், மதுரை மாநகராட்சி ஆணை யர் சிம்ரன்ஜித் சிங், மேயர் வ.இந்திராணி ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்பின்னர் செய்தியாளர்களை சந் தித்து அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாட்டின் நிதிநிலை மிகவும் சிறப் பாக முன்னேறியுள்ளது. 2003 முதல் 2014 ஆம் ஆண்டு வரை முதல் 3 ஆண்டுகள் ஜெயலலிதா முதல்வராகவும், அடுத்த ஐந்து ஆண்டுகள் கலைஞர் முதல்வராக வும் அடுத்த இரண்டு ஆண்டுகள் ஜெய லலிதா இருந்தபோது தமிழ்நாட்டின் நிதித் துறை சிறப்பாக முன்னேறி இருந்தது. வருமானத்தில் வட்டி 21 சதவீதம் கட்ட வேண்டியிருந்தது. அதன் பின்பு 11 சதவீதம் குறைந்திருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த முதலாண்டில் பெரிய முன்னேற்றம், திருத்த மதிப்பீட்டில் ரூ.11 ஆயிரம் கோடி என காண்பித்தோம். பல மத்திய திட்டங்களும் மாநில, ஒன் றிய அரசு பங்கீட்டிலே கிடைக்கும் .முழுவது மாக ஒன்றிய அரசு செலவுகள் செய்யாது. தலைமைச் செயலகத்தில் வெள்ளியன்று நடைபெற்ற கூட்டத்தில் எனக்கு மிகப் பெரிய திருப்தி உள்ளது. அடுத்து வரக்கூடிய 2022 - 23 சிறந்த நிதி ஆண்டாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 2022- 2023 ஆம் ஆண்டில் ரூ.24 லட்சம் கோடி உற்பத்தியை எதிர்பார்க்கிறோம். 2024- 2025 ஆண்டில் ரூ.30 லட்சம் கோடி உற்பத்தியை எதிர் பார்க்கிறோம்.
இது கிட்டத்தட்ட 90 ஆயிரம் கோடி முதலீடு செய்ய வாய்ப்பிருக்கும். இது மிகப்பெரிய மாற்றம். கொரோனா கால கட்டம் வரை ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டை தாண்டியது இல்லை. ஆனால் கடந்த ஆண்டு ரூ.36 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளோம். இந்த ஆண்டு ரூ. 43 ஆயிரம் கோடி முத லீட்டை எதிர்பார்க்கிறோம்.ரூ.100 கோடிக்கு மேல் உள்ள திட்டங்களுக்கான தலைவராக என்னை முதல்வர் தேர்வு செய்துள்ளார். அதற்கான கூட்டம் கடந்த 29ஆம் தேதி நடைபெற்றது. இதில் அனைத் துத்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோ சித்து செயல் திறனை அதிகப்படுத்த வேண் டும் என கூறியுள்ளேன்.முதலீடு செய்யும் பொழுது அதனை செயல்படுத்த செயல் திறன் மிகவும் முக்கியம். இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து குடும்ப விவரங் கள் எடுக்கப்பட்டு வருகிறது. எந்த தக வல், எந்த எல்லை என்பதில் 85 சதவீதம் தெளிவு ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற் கான காலத்தை முதல்வர் எங்களுக்கு வழங்கியுள்ளார். திட்டம் எப்பொழுது செயல்படுத்தப்படும் என்பதை முதல்வர் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.