states

கோடநாடு வழக்கில் இடைக்கால அறிக்கை

உதகை, செப்.8- நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கோட நாடு எஸ்டேட்டில் 24.4.2017 ஆம் தேதியன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப் பட்டார். மேலும் எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது  செய்தனர்.   இந்நிலையில், இந்த  வழக்கு வெள்ளியன்று நீல கிரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் சிபிசிஐடி தரப்பில் வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ், கூடுதல் துணை கண்காணிப்பாளர் முருக வேல் உள்ளிட்டோர் ஆஜரா கினர். குற்றம்சாட்டப்பட்ட வர்கள் தரப்பில் வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி ஆகி யோர் ஆஜராகினர். கோடநாடு வழக்கு விசார ணை குறித்து, முழு விவ ரங்கள் எதுவும் தெரிவிக்கப் படாததால் மாவட்ட நீதிபதி அப்துல் காதர் அதிருப்தி தெரிவித்தார்.  சிபிசிஐடி தரப்பில் 4 பக்கங்கள் கொண்ட இடைக் கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் மின்னணு ஆதாரங்கள் குறி த்த அறிக்கை இதுவரை கிடைக்காததால், வழக்கு விசாரணைக்கு அரசு தரப் பில் அவகாசம் கேட்கப்பட் டது.  அடுத்த மாதம் 13ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை யை  நீதிபதி ஒத்தி வைத்தார்.