states

விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு: அமைச்சர் தகவல்

சென்னை,ஏப்.5- தமிழ்நாட்டில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சின்ன போரூர் பகுதியில்  கர்ப்பிணி தாய்மார்கள் பரிசோதனை கருவிகள் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை கண்டறியும் கருவி ஆகியவற்றை பொதுமக்களுக்கான மருத்துவ பயன்பாட்டிற்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்  கூறியதாவது:-

 சட்டமன்றத்தில் சுகாதாரத் துறையின் கீழ் அறிவிக்கப்பட்ட 110 அறிவுப்புகளும் வருகிற 29 ஆம் தேதிக்குள் செயல்படுத்தி விட வேண்டும் என்ற முனைப்பு டன் செயல்பட்டு வருகிறோம். ஆரம்ப  சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிக ளுக்கான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவிகள் அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும். சென்னை யில் 10 நகர்ப்புற சுகாதார மையங்க ளில் 1.10 கோடி செலவில் அறிமுகப் படுத்தப்படுகின்றன. கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளை கண்டறிய நுரை யீரல் செயல்பாட்டை கணிக்கும் ஸ்பை ரோமீட்டர் கருவிகள் 66.3 லட்சம்  செலவில் தமிழகம் முழுவதும் 38  மாவட்ட தலைமை மருத்துவ மனைகளில் அறிமுகப்படுத்தப்படும். கிராமப்புறத்தில் 25 ஆரம்ப சுகாதார மையங்களும் நகர்ப்புறத்தில் 25 சமுதாய சுகாதார மையங்களும் புதிதாக தொடங்கப்பட உள்ளன. வரும்  29 ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வரும்.

சித்த மருத்துவ பல்கலைகழகத்துக் கான தற்காலிக அலுவலகத்தை அமைந்தகரையில் உள்ள அறிஞர் அண்ணா சித்த மருத்துவமனை யில் 14 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.  19.2 ஏக்கர் நில பரப்பில் மாத வரத்தில் சித்த மருத்துவ பல்கலைக் கழகம் அமைக்கப்படும். அண்ணா சதுக்கத்திலிருந்து வரும் 8-ஆம்தேதி 389 நடமாடும் மருத்துவ வாகனங்களை முதல்வர் தொடங்கி வைப்பார். அவை  அடிப்படை பரிசோதனை வசதிகள் கொண்டவை. தமிழகம் முழுவதும் இந்த வாகனங்கள் செல்லும். வெளிநாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. இதன் காரண மாக சென்னை விமான நிலையத் தில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தொடர் கண்காணிப்புக்கு பிறகே அனு மதிக்கப்படுகிறார்கள். இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து விமான  நிலையங்களிலும் பயணிகள்  கண்காணிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.