states

தீக்கதிர் விரைவு செய்திகள்

புத்தக வாசிப்பு அவசியம்:  கனிமொழி எம்.பி.,

சென்னை,ஜன.18- அனைவரும் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது அவசியம் என்று திமுக எம்பி கனிமொழி கேட்டுக்கொண்டார்.  46-வது சென்னை புத்தகக் காட்சி ஒய்எம்சிஏ மைதானத்தில் நடை பெற்று வருகிறது. இதில் தமிழக சிறைத்  துறைக்கு ஒரு அரங்கம் (எண் 286) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தில், தமிழ்நாடு  முழுவதும் உள்ள சிறைச்சாலை நூலகங்களுக்காக புத்தகங்கள் சேகரிக்கப்படுகின்றன. அதன்படி  கண்காட்சிக்கு வரும் வாசகர்கள்  பலர், தங்களுக்குப் பிடித்தமான  நூல்களை சிறைவாசிகளுக்காக தானமாக வழங்கி வருகின்றனர். இந்நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி, சென்னை  புத்தகக் காட்சியை பார்வையிட்டார். அப்போது சிறைத் துறையின் அரங்கத்தில் கைதிகளுக்காக 150 புத்தகங்களை தானமாக வழங்கினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்க ளிடம் பேசுகையில், “புத்தக வாசிப்பு தான் சிறந்த சமூகத்தை உருவாக்கும். எனவே, அனைவரும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வது அவசியமானது. புத்தகங்களுக்கு என்றும் அழிவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பின்னர் நூல்கள் டிஜிட்டல் பரிணாமத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன”என்றார்.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை மீண்டும் இணைக்க அறிவுறுத்தல்

சென்னை,ஜன.18- தமிழ்நாட்டில் வீடுகள், விவசா யம், குடிசை வீடுகள், விசைத்தறி என மானியம் பெறும் மின் இணைப்பு கள் 2.67 கோடி உள்ளன. இவ்வாறு மானியம் பெறும் திட்டங்களை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு, ஒன்றிய பாஜக அரசு அறிவுறுத்தியது. இதற் காக, தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய  அலுவலகங்களில் 2,811 சிறப்பு முகாம்கள் செயல்பட்டு வருகிறது. வரும் 31 ஆம் தேதி கடைசி நாளாகும். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனக் கடந்த ஆண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டதும், பலரும் அவசர அவசரமாக ஆன்லைன் மூலமாக ஆதார் எண்ணை இணைத்தனர். இதன் படி, டிசம்பர் 4  முதல் 12 வரை  ஆயிரக்கணக்கானவர்கள் ஆன்லைன்  மூலம் ஆதார் எண்ணை இணைத் திருந்தனர். இந்த இடைப்பட்ட தேதி களில் ஆதார் எண்ணை இணைத்த வர்களின் தகவல்கள் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக அழிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு  தகவல்கள் அழிந்து போன நுகர்வோ ரின் ஆதார் எண்ணை மீண்டும் இணைப் பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, விடுபட்ட ஆதார்  இணைப்பு எண்களுக்கு உரியவர்க ளுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல்  அனுப்பப்பட்டு வருகிறது.அத்தகைய  மின் நுகர்வோர் மீண்டும் மின் அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதே சமயம், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரில்  வந்து இணைத்தவர்களுக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை என மின்வாரிய  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஞாயிறன்று பருவத்தேர்வு: மாணவர்கள் அதிருப்தி

சென்னை,ஜன.18- விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையும் பருவத் தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள் ளதால் மாணவர்கள் அதிருப்தி யடைந்துள்ளனர். சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி மூலம்  எம்பிஏ, எம்சிஏ  மற்றும் எம்.எஸ்சி (கணினி அறிவி யல்) பட்டப் படிப்புகளை பயிற்று வித்து வருகிறது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டுக்கான பருவத்தேர்வு (ஆகஸ்ட் - செப்டம்பர்) அட்டவணையை பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி பருவத்தேர்வுகள் ஜன.30 தொடங்கி பிப்.23 வரை நடைபெறவுள்ளன. இதற்கான கால அட்டவணையில், பிப்ரவரி 12 ஞாயிற்றுக்கிழமை தரவுதள மேலாண்மை அமைப்பு, மின் வணிகம், மருத்துவச் சுற்றுலா உள்ளிட்ட சில பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான நுழைவுத்  தேர்வுகள், போட்டித் தேர்வுகள் மட்டுமே ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும். ஆனால், புதிய நடைமுறையாக தற்போது, பட்டப் படிப்புகளுக்கான பருவத்  தேர்வையும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக  வலைதளங்களில் இது விவாதப்  பொருளாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.

சொத்துக்கள் கணக்கெடுப்பு

நாமக்கல்,ஜன.18- நாமக்கல் தொகுதி அதிமுக  முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி. பாஸ்கர். லாரி டிரான்ஸ் போர்ட் தொழில் செய்து வருகிறார். அத்துடன் தனது பெயரிலும், தனது  மனைவி பெயரிலும் பல்வேறு நிறுவனங்களையும் நடத்தி வருகி றார். இவர் எம்.எல்.ஏ.வாக இருந்த போது வருமானத்துக்கு அதிக மாக 315 விழுக்காடு சொத்து களை வாங்கிக் குவித்ததாக எழுந்த புகாரின் பேரில், சோதனை  நடத்தினர். தற்போது அவரது சொத்துகளை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது.