states

சிவப்பு பிரிவு தொழிற்சாலைகளிலும் ஆய்வு

சென்னை, டிச.29 - சிவப்பு பிரிவு (ரெட்  கேட்டகிரி) இருக்கும்  அனைத்து தொழிற்சாலை கள் ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் மெய்ய நாதன் தெரிவித்துள்ளார். சென்னை எண்ணூர் பகுதியில் கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் கம்பெனியில் இருந்து அமோனியா எரிவாயு கசிவு ஏற்பட்டு அப்பகுதியில் வசிக்கக்கூடிய பெரிய குப்பம், சின்ன குப்பம் மீனவ  கிராமத்தைச் சேர்ந்தவர் களுக்கு கண் எரிச்சல் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதை அறிந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை, தீய ணைப்பு துறை, மாசுக்கட்டுப் பாட்டு வாரிய அதிகாரி கள், மாநகராட்சி அதிகாரி கள், விரைந்து நடவடிக்கை  எடுத்து உடனடியாக குழாயை சரி செய்யப் பட்டது. அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதி களில் மருத்துவ முகாம்கள்  நடத்தப்பட்டு, பொது மக்கள் அனைவரும் பரிசோ தனை செய்யப்பட்டு ஆலோ சனைகள் வழங்கப்பட்டன. மேலும் கோரமண்டல் நிறுவனத்தை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து தொழிற்சாலைகளும் வல்லு நர் குழு அமைத்து பாது காப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறிய அமைச்சர், “அமோனியா கசிவு ஏற்பட்ட நிலையில் 15 நிமிடத்தில் ஆலை நிர்வாகம் அதை சரி செய்துள்ளது. இந்த  வாயு கசிவால் 18 பேர்  பாதிக்கப்பட்டு சென்னை  ஸ்டான்லி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனடியாக அப்பகுதிக்கு மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சென்று, பரிசோதனை நடத்தினர். அப்போது அப்பகுதியில் பூஜ்யம் சதவீதம் அமோனியா இல்லை என்று கண்டறியப் பட்டது”என்றார். விபத்து ஏற்பட்ட போதிலும் அது உடனடியாக சரி செய்யப்பட்டது. அந்த தனியார் தொழிற்சாலை ரெட் கேட்டகிரியில் உள் ளது. அதேபோல் ரெட்  கேட்டகிரியில் இருக்கும்  அனைத்து தொழிற்சாலை களும், மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அனைத்து பாதுகாப்பு அம்சங்கள் சரியாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். இதுபோன்ற விபத்துகள் ஏற்படும் போது, அதை தடுக்க நவீன தொழில்நுட்ப அம்சங்கள் உடனடியாக பயன்படுத்தும் நிலையில் உள்ளதா என்பது குறித்து ஒரு குழு அமைத்து வல்லு நர்கள் உதவியுடன் ஆய்வு நடத்தப்பட உள்ளது என்றும்   அந்த தனியார் கம்பெனி தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.