states

ஓய்வூதியர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண வலியுறுத்தல்

சென்னை, மே 8 - போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை மே 12 அன்று மீண்டும் நடைபெறுகிறது. இதில் ஓய்வூதியர் பிரச்சனைக்கு தீர்வு காணாவிடில், அனைத்து பகுதி ஓய்வூதியர்களும் இணைந்து போராடும் நிலை உருவாகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கி ணைப்புக் குழுவின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன், பொதுச் செயலாளர் கே.ராகவேந்திரன் ஆகியோர் விடுத் துள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது: அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூ தியர்கள் மற்றும் குடும்ப ஓய்கூதியர்கள் முறையாக ஓய்வூதியம் வழங்க வேண்டும், அகவிலைப்படியை உயர் த்தி நிலுவையை வழங்க வேண்டும், குறைந்தபட்சம் ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க வேண்டும், மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளு க்காகப் போராடி வருகின்றனர். இதை மாநில அரசுகள் கண்டு கொள்ள வில்லை. நீதிமன்றத் தீர்ப்புகளைக் கூட மாநில அரசும், போக்குவரத்து நிர்வாக மும் அமல்படுத்த மறுக்கின்றன. 77 மாதங்களாக அகவிலைப்படி உயர்வுகள் மறுக்கப்பட்டு வருவது மனிதத்தன்மைஅற்றது. ஓய்வு பெறும் பலருக்கும் ஓய்வூ தியம் உடனடியாக வழங்குவதற்கு ஏற்பாடு இல்லாதது கண்டனத்திற் குரியது. ஓய்கூதியர்களுக்கும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கப்படாதது கொடிய செயல்.

ஒன்றிய-மாநில அரசு ஊழியர்க ளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் மாற்றியமைக்கப்படுகிறது. ஆனால், போக்குவரத்து ஓய்வூதியர் களுக்கு எந்த மாற்றமும் இன்றி 3050 ரூபாய் என்று தொடர்வது கேலிக்கூத்தானது. தற்போது அமலில் உள்ள புதிய ஓய்வூ தியம் திட்டத்தினால் இறந்து போன பல ஓய்வூதியர்களின் குடும்பங்கள் அவல நிலையில் உள்ளன. பல ஆண்டுகளாக கருணை அடிப்படையிலான நியமனங்கள் இல் லாத நிலை உள்ளது. அங்கீக ரிக்கப்பட்ட நபர்கள் விரும்பினாலும் 20 ஆண்டுகளுக்குப் பின்னர், வாரிசுக ளுக்கு வேலை அளிக்க மறுப்பது அநியாயமானது. ஓய்வூதியம் வழங்குவது அரசின் பொறுப்பல்ல என்று மாநில அரசு கைவி ரித்துள்ளது. நீதி மன்றங்களில் துறை அரசு செயலர் ஆஜராகி பொறுப் பேற்றதை தற்போது மாநில அரசு மறுக்கி றது. ட்ரஸ்ட் அல்லது நிர்வாகத்திற்கு உரிய ஓய்வூதியம் வழங்குவதற்கான நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்யும் பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. சட்டமன்றத்தில் போக்குவரத்து மானிய விவாதத்தில் ஓய்வூதி யர்களுக்கு எந்த மானியமும் ஒதுக்க வில்லை. மே.12 அன்று நடைபெறும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில், ஓய்கூதியப் பிரச்சனையைத்தான் ஊழியர் சங்கங்கள் முதல் கோரிக்கை யாக வைத்துள்ளன.  எனவே,அதற்கு நிச்சயம் தீர்வு காணப்படும் என்று அரசுத் தரப்பில் கூறியிருப்பதை அமலாக்க வேண்டும். அந்த பேச்சுவார்த்தைக்கு தொடர்ந்து போராடி வரும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப் பின் தலைவர்களையும் அழைக்க வேண்டும். இந்த பேச்சுவார்த்தையில் உரிய தீர்வு காணாவிடில், தமிழகம் முழுவ தும் ஓய்வூதியர் அமைப்புகள் இணைந்து ஒன்றுபட்ட இயக்கங்கள், போராட்டங்களை நடத்தும் சூழல் உரு வாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.