கோவை, ஏப்.30- கொடநாடு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் ஏப்ரல் 30 அன்று இரண்டாவது நாளாக விசா ரணை நடத்தப்பட்டது. நீலகிரி மாவட்டம், கொநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் டில் 2017 ஆம் ஆண்டில் கொள்ளை முயற்சி நடந்தது. இதில் எஸ்டேட் டின் காவலாளி ஓம்பகதூர் கொல் லப்பட்டார். இதுதொடர்பாக பலரை நீலகிரி மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். இதில் முக்கிய நப ரான கனகராஜ் விபத்தில் உயிரி ழந்தார். கொடநாடு வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியுள்ளது. தனிப் படை போலீசார் இதுவரை 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி யுள்ளனர். இந்நிலையில், ஜெய லலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் ஏப்ரல் 29 அன்று விசாரணை நடைபெற்றது. ஏப்ரல் 30 அன்று இரண்டாவது நாளாக கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் பூங் குன்றனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். ஐ.ஜி. சுதாகர் தலைமையில் இந்த விசாரணை நடை பெற்றது. ஜெயலலிதாவின் நிழல்போல உடன் பயணித்தவர் பூங்குன்றன் என்று கூறப்படுகிறது. கொடநாடு எஸ்டேட்டில் என்னென்ன மாதிரி யான பொருள்கள் இருந்தன, எந்த மாதிரியான ஆவணங்கள் இருந்தன என்று பூங்குன்றனிடம் விசாரித்ததாக கூறப்படுகிறது.