states

img

சங்கரன்கோவில் அருகே ஆராய்ச்சிபட்டியில் புற்று நோய் அறிகுறி

தென்காசி, ஜூலை 12 சங்கரன்கோவில் அருகே ஆராய்ச்சிபட்டியில் 5 பேருக்கு புற்றுநோய் அறிகுறிகள் இருப்பதால் தமிழக மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது அந்த கிராமத்தில் 13 பேருக்கு கர்ப்பப் பை வாய் புற்றுநோய், 13 பேருக்கு மார்பகப் புற்று நோய் என 26 பேருக்கு  அறிகுறிகள் இருப்பது தெரிய வந்துள்ளது என்ற அதிர்ச்சி கரமான தகவலை வெளியிட்டார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள ஆராய்ச்சிபட்டி கிராமத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அங்கு புற்று நோய் பாதிக்கப்பட்ட 2 பேர்களின் வீடுகளுக்கு சென்று மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.அவர்களுக்கு தொடர் சிகிச்சை யும் உதவியும் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். இதன் பிறகு அங்கு அமைக்கப்பட்டுள்ள முகாமை பார்வை யிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:

சங்கரன்கோவில் அருகே ஆராய்ச்சி பட்டியில்1340 பேரில் 18 வயதை தாண்டியவர்களில் ஒரு சிலருக்கு புற்றுநோய் பாதிப்பு கள் இருப்பதாக தொடர்ந்து சொல்லப்பட்டு வந்ததால், அந்த பாதிப்புகள் குறித்து கண்டறிய  ஆய்வு செய்திருக்கிறோம். இங்கு 2 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறி யப்பட்டது.ஏற்கனவே 5 நபர்களுக்கு புற்று நோய்க்கான பாதிப்பு இருக்கிறது. அதில் 2 பேர் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்த 4 நாட்களாக இங்கு ஆய்வு செய்ததில் 13 பேருக்கு  கர்ப்பப்பை வாய் புற்றுநோய், இருப்பதும் 13 பேருக்கு  மார்பக புற்றுநோய் அறிகுறிகள்  இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

இந்த 26 பேருக்கும் முழுமையான அளவில் பரிசோதித்து அவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு தன்மை இருக்கிறதா என் பதை உறுதி செய்த பின்னர்  முறையான சிகிச்சை வழங்குவ தற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அது மட்டுமல்லாது  1340 பேரில் 28 பேருக்கு  புற்றுநோய் தொடக்க நிலைக்கான அறிகுறிகள் இருப்பது தென்படுகிறது. இது குறித்து அறிவியல்பூர்வமாக ஆராய்வதற்கு துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இன்னும் ஒரு வாரத்திற்குள் 1340 பேருக்கும் முழுமையாக பரிசோதித்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். ஆராய்ச்சிப்பட்டியில் இருந்து சங்கரன்கோவிலுக்கும் கோவில்பட்டிக்கும் பேருந்து வசதி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூடுதலாக கழுகுமலை க்கு ஒரு பேருந்து விடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது ராஜா எம்எல்ஏ, திமுக தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாபன் ,  நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, ஒன்றிய பெருந்தலைவர் லாலா சங்கரபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.