states

வீங்கும் பணம்; சுருங்கும் வேலைவாய்ப்பு

பணவீக்கம் 2023 முழுவதும் சுமார் 6 விழுக்காடு அள வில் உயர்ந்திருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்பார்க்கப்பட்டதைவிட 0.3 விழுக்காடு அதிகமாகும். 96 விழுக்காடு உலகப் பொருளாதாரங்களில் குறி யீட்டளவைக்காட்டிலும் பணவீக்கம் அதிகமாக இருக்கப் போகிறது. உணவுப்பொருள்களின் விலை உயர்வு காரணமாக ஏற்பட்ட பணவீக்கமும், உல கம் முழுதும் உயர்ந்திருப் பது நீடிக்கிறது. 2023 பிப்ர வரிக்கும் மே மாதத்திற்கும் இடையிலான தரவுகளின் அடிப்படையில், குறைந்த வருமானங்கள் உள்ள நாடு களில் 60 விழுக்காடும். நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் 70 விழுக்காடும் பணவீக்கம்-விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் பணவீக்கம் 5 விழுக்காட்டுக்கும் அதிக மான உயர்வைக் கொண்ட தாக இருந்தது. பல நாடு களில் இரண்டு இலக்க பண வீக்க உயர்வும் ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருள்களின் விலை  உயர்வால் ஏற்பட்ட பணவீக்கம், மொத்தம் 163 நாடுகளில் 80 விழுக்காடு நாடுகளில்  ஒட்டுமொத்த பணவீக்க விகிதத்தைவிட அதிகமாக இருக்கிறது.  

பணவீக்கத்தைக் கட்டுப் படுத்துவதற்காக, அமெ ரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி யும் பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் வட்டி விகிதங்களை உயர்த்தி இருக்கின்றன. இது, நிதித் துறையில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மூன்று அமெரிக்க வங்கிகள் மற்றும் கிரெடிட் சூயிஸ்  (Credit Suisse)   போன்ற வங்கி களும் நிலைகுலைந்தன. இதனைத் தொடர்ந்து, அமெரிக்க ரிசர்வ் வங்கி பெடரல் ரிசர்வ் வங்கி, ஜூனில் தங்களுடைய வட்டி  விகித உயர்வுகளை நிறுத்தி  வைத்தது. இதன் பின்னர்  சிறிது காலத்தில் சில்வர்கேட் வங்கி மற்றும் ஃஹார்ட் லேண்ட் டிரை-ஸ்டேட் வங்கி  என இரு அமெரிக்க வங்கி கள் வீழ்ந்தன. பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக, வட்டி விகிதங் களை  உயர்த்த நிர்ப்பந்தங் கள் வருகின்றன. ஐரோப் பிய ஒன்றியம், பிரிட்டன், ஆஸ்திரேலியா  மற்றும்  கனடா ஆகிய நாடுகளில் உள்ள மத்திய வங்கிகளும், மைய பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக தங்கள் வட்டி விகிதங்களை உயர்த்துவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது பொருளாதாரத்தையும், வேலை வாய்ப்பை உரு வாக்குவதையும் மேலும் சுருக்குவதற்கே இட்டுச் செல்கிறது. உலகப் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்ப தும், உலக வர்த்தகத்தில் வீழ்ச்சியும், பணவீக்கமும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதும், அதிலும் குறிப்பாக உணவுப் பொருள் களின் பணவீக்கம் அதி கரித்துக் கொண்டிருப்பதும், உலக வேலைவாய்ப்பை மேலும் சுருக்குவதற்கும், உழைக்கும் மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்று வதற்குமே இட்டுச்செல்லும்.