states

இந்திய ரூபாய் மதிப்பு தொடர் சரிவு டாலர், 78 ரூபாய் 29 காசுகளாக வீழ்ச்சி!

புதுதில்லி, ஜூன் 22- அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பானது, 78  ரூபாய் 29 காசுகள் என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த செவ்வா யன்று, டாலருக்கு இணையான ரூபா யின் மதிப்பு 78 ரூபாய் 13 காசுகள் என்று  இருந்த நிலையில், அது மேலும் சரிந் துள்ளது. ரஷ்ய - உக்ரைன் யுத்தம் காரண மாக உலக விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலகளாவிய அளவில்  ஏற்பட்டுள்ள பணவீக்கம் ஆகியவை சர்வதேச வர்த்தகச் சந்தைகளை கடுமை யாக பாதித்து வருகின்றன. இதனி டையே, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியது, மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலீட் டாளர்கள் தங்களின் முதலீடுகளை எடுத்துக் கொண்டு அமெரிக்காவை நோக்கி ஓடத் துவங்கியுள்ளனர்.  இது பல்வேறு நாடுகளின் நாணய மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள் ளது. இந்திய ரூபாய் மதிப்பிலும் அது  தொடர்ந்து தாக்கத்தை செலுத்தி வரு கிறது. இந்தியாவிலிருந்து 2022 ஜூனில் மட்டும் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய்  அளவிற்கான அந்நிய முதலீடு வெளி யேறியுள்ளது. தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது. 

மே 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 15 நாட்களில் 3894 கோடி ரூபாய் மதிப்  பிலான முதலீடுகள் மட்டுமே வெளியேறி யிருந்தன. ஆனால், ஜூன் மாதத்தின்  முதல் பாதியில் மட்டும் 24 ஆயிரத்து 949 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து முதலீட்டாளர்கள் வெளியேறியுள்ளனர். நிதிச் சேவைகள், நுகர்வோர் பொருட்கள், எப்எம்சிஜி, உலோ கங்கள் மற்றும் சுரங்கம் போன்ற துறை களில் இருந்து, அந்நிய போர்ட்போ லியோ முதலீடுகள் (FPI) தொடர்ந்து வெளியேறி வருகின்றன.  இதனால் ரூபாய் மதிப்பும் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்திக்கத் துவங்கி யுள்ளது. செவ்வாயன்று 78 ரூபாய் 13 காசுகள் என்ற நிலையில் இருந்தது, புத னன்று 78 ரூபாய் 29 காசுகள் அளவிற்கு  சரிந்தது. மேலும், இந்த வாரத்தில் 78 ரூபாய் 45 காசுகள் என்ற அளவிற்கு ரூபாய் மதிப்பு சரியலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.