துபாய் விமான நிலையம் செல்பவர்களில் அதிக பயணிகளை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. கடந்தாண்டில் மட்டும் 1.19 கோடி இந்தி யர்கள் துபாய் சென்றுள்ளனர். 2023இல் துபாய் விமான நிலையத்திற்கு மொத்தம் 8.99 கோடி பய ணிகள் வருகை தந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தவர் களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்ச ரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ராணுவம், கடற்படையில் நிரந்தர கமிஷன் பிரிவில் பெண்கள் அனுமதிக்கப்பட்ட நிலை யில், கடலோர காவல் படையில் ஆணாதிக்க மனப் பான்மை ஏன் என்று ஒன்றிய அரசிடம் உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பாஜகவின் சர்வாதிகாரப் பிடியில் இருந்து ஜனநாயகத்தை உச்சநீதிமன்றம் காப் பாற்றி உள்ளது. சண்டிகர் மேயர் தேர்தல் தொடர் பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காங்கிரஸ் தலை வர் மல்லிகார்ஜூன கார்கே வரவேற்பு தெரிவித்தார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் திரு மணத்தை முன்னிட்டு தனது சிரிப்பை சரி செய்ய ‘ஸ்மைல் டிசைனிங்’ அறுவை சிகிச்சை செய்த லக்ஷ்மி நாராயணா (28) என்ற மண மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் எல். முருகன் மத்தியப்பிரதேசத்தில் இருந்தும், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குஜராத்தில் இருந்தும் மாநிலங்களவை பதவிக்கு போட்டி யின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
பிரபல இந்தி நடிகர் ரிதுராஜ் சிங் (59) மார டைப்பு காரணமாக செவ்வாயன்று உயிரி ழந்தார். தமிழில் கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் நடித்திருந்த ரிதுராஜ் சிங் சமீபத்தில் கணைய பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மாரடைப்பு காரணமாக காலமானார்.
பாஜகவில் இணையப் போவதாக வெளி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, போபாலில் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் காணொலி வாயிலாக கமல்நாத் கலந்துகொண்டார்.