states

செங்கோட்டையில் சுதந்திர தினம்

சென்னை, ஆக14-  தில்லி செங்கோட்டையில் செவ்வாயன்று (ஆக.15) பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை யாற்றுகிறார். அங்கு நடைபெறும் அணிவகுப்பு மரியாதையையும் பிரதமர் மோடி பார்வையிடுகிறார். இந்த ஆண்டு ஜி20 அமைப் பின் தலைமைப் பொறுப்பில் இந்தியா இருப்பதால் மலர் அலங் காரத்தின் முக்கிய அம்சமாக ஜி20 லச்சினை இடம் பெறுகிறது. செங்கோட்டையில் நடக்கும் சுதந்திர தின விழாவை காண்பதற்கு நாடு முழுவதும் பல்வேறு துறை களை சார்ந்த 1800 பேர் தங்களது வாழ்க்கை துணையுடன் பங்கேற்க சிறப்பு விருந்தினர்களாக அழைக் கப்பட்டுள்ளார். இதில் தமிழ்நாட்டில்  இருந்து 44 பேர் குடும்பத்துடன் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. விவசாயத்துறை சுதாகர் (கோவூர் ஊராட்சி மன்ற தலைவர்), எஸ்.சங்கீதா திண்டுக்கல் அருகே ஆத்தூரை சேர்ந்த ஜம்ரூத் பேகம் மற்றும் ஈஷாக் (கதர் துறை) காங்கே யம் காட்டுப்பாளையம் பழனிச்சாமி.  திருப்பூர் செல்வி நீலாங்கரை மீனவ பிரதிநிதிகள் முனுசாமி-பத்மா  உள்பட கன்னியாகுமரி, கோவை,  ஈரோடு, இராமநாதபுரம், புதுக் கோட்டை, விழுப்புரம், பகுதியை சேர்ந்த 22 மீனவ பிரதிநிதிகள் சார்பில் பங்கேற்கிறார்கள். கல்வித்துறை  சார்ந்த பிரதிநிதிகளாக தாம்பரம் மாடம்பாக்கத்தை சேர்ந்த பாரத் ரத்னா, விழுப்புரம் மாவட்டம் வானூரை சேர்ந்த சுந்தரி ஆகியோர்  பங்கேற்கின்றனர்.