முதலமைச்சரிடம் மாதர் சங்கம் நேரில் வலியுறுத்தல்
சென்னை, மார்ச் 30- பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை குறித்து சட்டமன்றத்தில் சிறப்பு அமர்வு நடத்தி விவாதிக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் மாதர் சங்கத் தலைவர்கள் நேரில் வலியுறுத்தினர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் தேசிய செயலாளர் பி.சுகந்தி, மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, பொதுச் செயலாளர் அ.ராதிகா, பொருளாளர் ஞா.பிரமிளா ஆகி யோர் மார்ச் 24 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டா லினை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அரசியல் கட்சிகளின் ஈடுபாடு இல்லாமல் எதுவும் செய்வது சாத்தியம் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்கள் மற்றும் குழந்தை கள் மீதான வன்முறை குறித்த விவரங்கள், அதற்கான நடவடிக்கைகள் பற்றிய வெள்ளை அறிக்கை வைத்து அதன் மீது மக்கள் பிரதிநிதி கள் விவாதித்து தீர்வு காண வேண்டும்.
நுண்நிதி நிறுவனங்கள்
அதிக வட்டி வசூல் செய்வது, தவணை தொகை திருப்பி செலுத்த முடியாத பெண்களை மோசமாக நடத்துவது போன்ற சட்ட விரோத நட வடிக்கைகளில் நுண்நிதி நிறுவனங்கள் ஈடு படுகின்றன. இது பெண்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கும் தள்ளுகிறது. எனவே, அரசே பெண்களுக்கு இத்தகைய சிறு கடன் உதவி வழங்கிட வேண் டும். நுண் நிதி நிறுவனங்கள் மீதான புகார் களை விசாரிக்க தனி ஹெல்ப்லைன் உரு வாக்கிட வேண்டும்
போதைக்கு எதிராக
சமீப காலமாக போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் போதைக்கு இரையாகி வருவது மிகுந்த அச்சமடைய செய்கிறது. ஒரு தலை முறையையே சீரழிக்கும் இத்தகைய போதை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு போதைக்கு எதிரான விழிப்புணர்வு நட வடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கிட வேண்டும். அதிகரித்து வரும் பெண்கள், குழந்தை கள் மீதான வன்முறை வழக்குகளை கையாள் வதில் ஆலோசனை வழங்க மாவட்ட ஆலோ சனை குழுக்களை அமைத்திட வேண்டும். பெண் கள் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதி கரிக்க மிக முக்கிய காரணியாக இருப்பது போதை என்பது பல ஆய்வுகளில் தெரிய வந் துள்ளது. அதன் அடிப்படையில் டாஸ்மாக் கடை களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்திட வேண்டும்.
சமூக நீதித்துறை
கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் சமூக நீதித்துறை என்று ஒரு துறை அமைக் கப்பட்டு இருந்தது. அத்துறை சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக, பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிராக பிரச்சாரம் செய்வது, இது குறித்து திரைப்படங்கள், குறும்படங்கள் எடுப்பது, சமூக நீதியை வலியுறுத்தும் திரைப்படங்க ளுக்கு அரசு விருது வழங்குவது போன்ற செயல்பாடுகளை செய்தன. மீண்டும் இது போன்ற துறையை ஏற்படுத்தினால் கருத்தியல் தளத்தில் மிகப்பெரிய பிரச்சாரத்தை செய்ய முடியும். பெண்களுக்கு சட்டப் பாதுகாப்பு இருந்தாலும், கருத்தியல் ரீதியாக பின்தங்கிய சிந்தனையும், மனநிலையும் இருந்தால் எத்த கைய சிறந்த விஷயமாக இருந்தாலும் அதை அமலாக்கிட முடியாது என்பதை உடைத்தெறிய இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியமாகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள பெண் பிரதிநிதிகள் சுயேச்சையாக செயல்பட உகந்த சூழலை உருவாக்க வேண் டும். குடும்பத்தில் உள்ள ஆண் உறவினர்கள் தலையீடு செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.
அரசு ஊழியர்கள், காவல் துறையினருக்கான பயிற்சி
அரசு நிர்வாகம், ஆசிரியர்கள், பள்ளி நிர்வா கத்தினர், நீதித்துறை என அனைவருக்கும் பாலின நிகர்நிலை பயிற்சி என்பது தொடர்ச்சி யாக நடத்தப்பட வேண்டும். பாடத்திட்டத்தில் இருக்கக்கூடிய அசமத்துவ கருத்துக்களை, பெண்ணடிமைத்தனத்தை, ஆணாதிக்கத் தனத்தை ஊக்கப்படுத்தும் விஷயங்கள் இருந்தால் அவற்றை நீக்க வேண்டும். போக்சோ உள்ளிட்ட சட்டங்களை அமல்படுத்தும்போது அல்லது பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு வழக்குகளை விசாரிக்கும்போது, காவல்துறை யின் கண்ணோட்டம்/ அணுகுமுறை மோசமான தாக இருக்கிறது. எனவே, காவல்துறையின ருக்கு பாலின நிகர்நிலை குறித்தும், பெண்கள், குழந்தைகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் முறை குறித்தும், பெண்கள் பாதுகாப்பு சட்டங் கள் குறித்தும் பயிற்சி வகுப்புகள் மேற்கொள் ளப்பட வேண்டும். இதில் பெண்கள் பிரச்சனை களில் தலையிட்டு, அனுபவம் உள்ள பெண்கள் அமைப்புகளை பயன்படுத்திட வேண்டும். இது கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்தது. தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கவுன்சிலிங் மையங்கள், தங்கும் விடுதிகள்
குடும்ப வன்முறை, குழந்தை திருமணம், குழந்தை உழைப்பு ஆகியவை அதிகரித்து வரும் இச்சூழலில், மாவட்ட ஊராட்சிகளில் கவுன்சிலிங் மையங்களை அமைத்திட வேண்டும். பெருநகரங்களில் பணிக்கு செல் லக்கூடிய பெண்கள் அதிகளவில் தனியார் விடுதி களையே நம்பி இருக்கக்கூடிய நிலை உள்ளது. ஈட்டும் வருமானத்தில் பெருமளவு விடுதி களுக்கே செலவு செய்யும் சூழலும் உள்ளது. ஆகவே, அரசே தங்கும் விடுதிகளை மாவட்ட அளவில் ஏற்படுத்திட வேண்டும்.
பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு கமிட்டி
பணியிடங்களில் மற்றும் கல்விக் கூடங்களில் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட வன்முறை யற்ற சூழல் உருவாக்கிட உள்புகார் கமிட்டி அமைக்க உத்தரவிட வேண்டும். அதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட வேண் டும்.
சுகாதார மையங்கள்
அரசின் சார்பில் ஆரம்ப சுகாதார நிலையங்க ளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திட வேண்டும். செயல்படுகிற சுகாதார மையங்க ளில் அனைத்துவிதமான மருத்துவ கட்டமைப்பு களையும் ஏற்படுத்திட வேண்டும்.
வேலைவாய்ப்பு
நவீன தாரளமயக் கொள்கையின் காரண மாக இருக்கும் வேலைகளும் பறிபோகும் சூழலில், பெண்களின் வேலை வாய்ப்பை அதி கரிப்பது சவால் நிறைந்தது என்பதை கருத்தில் கொண்டு, தேவையான நடவடிக்கைகள் எடுப்பதை உறுதிப்படுத்திட வேண்டும். சிறு, குறு தொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு தேவையான அளவு கடனுதவிகள் வழங்கிட வேண்டும். ஊரக வேலை உறுதி சட்டத்தில் பெண்களுக்கு 100 (150 - பட்ஜெட்) நாளும் வேலை கிடைக்க உறுதிப்படுத்திட வேண்டும். நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்தை மாவட் டங்கள்தோறும் அமலாக்கி பெண்களின் வேலைவாய்ப்பை உத்தரவாதப்படுத்திட வேண்டும். சம வேலைக்கு சம ஊதிய சட் டத்தை அனைத்துத்துறைகளிலும் அமல் படுத்திட வேண்டும். பணியிடங்களில் குழந்தை பராமரிப்பு மையங்கள் அமைத்திட வேண்டும்.
சாதிய, மதவாத, ஆணாதிக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள்
சாதி ஆணவ குற்றங்கள் மிக முக்கிய பிரச்சனைகளாக முன்னுக்கு வந்துள்ள சூழலில், இவற்றிற்கு எதிரான நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவது முக்கியமாகிறது. சாதி ஆணவ குற்றங்களை தடுக்க தனி சட்டங்கள் கொண்டு வர வேண்டும். இஸ்லாமிய பெண்களின் கல்வி, சிறுதொழில் பயிற்சிக்கு முக்கியத்துவம் அளித் திட வேண்டும். பெண்களை இழிவுபடுத்தும் அல் லது போகப் பொருளாக சித்தரிக்கும் விதத்தில் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மக்கள் பிரதிநிதிகளின் நடத்தை விதிகளில் ஒன்றாக மாற்றப்பட வேண்டும். ஊடக நிறுவனங்கள் விளம்பர முகமை பிரதிநிதிகளோடு அவ்வப்போது இது குறித்த கலந்துரையாடல் நடத்த வேண்டும். ஒரு திட்டமிட்ட பரவலான பெண் சமத்துவ தொடர் பிரச்சாரத்தை அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.