சென்னை, மார்ச் 10- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ் இளங் கோவன் எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்டார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திரு மகன் ஈவெரா மறைவை யடுத்து, இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டி யிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியா சத்தில் அபார வெற்றி பெற்றார். இந்நிலையில், வெள்ளி யன்று (மார்ச்.10) சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் அலுவலகத்தில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏவாக பதவியேற் றார். அவருக்கு பேரவைத் தலைவர் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ் ணன், சிபிஐ மாநிலச் செய லாளர் இரா.முத்தர சன், விசிக தலைவர் தொல். திருமாவளவன், மதிமுக தலைமை நிலையச் செய லாளர் துரை வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.