states

விருதுநகர் சந்தை துவரம் பருப்பு, வத்தல் விலை தொடர் உயர்வு உருட்டு உளுந்து, பட்டாணி பருப்பு விலை சரிவு

விருதுநகர், மார்ச் 19- விருதுநகர் சந்தையில் துவரம் பருப்பு,  வத்தல் ஆகியவற்றின் விலை வாரந்தோறும் உயர்ந்து வருகிறது. உருட்டு உளுந்து மற்றும் பட்டாணி பருப்பின் விலையானது சற்று குறைந்துள்ளது. விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வரு கிறது. அதன் விபரம் வருமாறு: கடந்த வாரம் 15 கிலோ பாமாயில் டின் ரூ.1510க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த  வாரம் டின் ஒன்றுக்கு ரூ.10 வரை உயர்வு  ஏற்பட்டு, தற்போது ரூ.1520க்கு விற்பனை யாகிறது. வத்தால் நாடு (புதுஸ் வகை) கடந்த வாரம்  100 கிலோ ரூ.18500 முதல் 21000 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1500 வரை உயர்வு ஏற்பட்டு, தற்போது மூட்டை ஒன்று ரூ.20 ஆயிரம் முதல் 22ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

துவரம் பருப்பு ( புதுஸ் நாடு) 100 கிலோ  ரூ.10,300 என்ற விலைக்கு விற்பனையான நிலையில் இந்த வாரம் குவிண்டால் ஒன்  றுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.10,600க்கு விற்ப னையாகி வருகிறது. தொலி உளுந்து : கடந்த வாரம் குவிண்டால் ஒன்று ரூ.9200க்கு விற்பனை யாகி வந்த நிலையில் தற்போது மூட்டைக்கு ரூ.200 உயர்ந்து ரூ.9400க்கு விற்பனை செய்யப்படுகிறது. பட்டாணி பருப்பு : பட்டாணி பருப்பு வெள்ளை ரகம்  ( இந்தியா) கடந்த வாரம்  குவிண்டால் ஒன்று ரூ.6500க்கு விற்பனை யானது, தற்போது  மூட்டை ஒன்றுக்கு ரூ.500 குறைவு ஏற்பட்டு தற்போது ரூ.6 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. உருட்டு உளுந்து : 100 கிலோ உருட்டு உளுந்து ( பர்மா எப்.ஏ.க்யு) கடந்த வாரம் ரூ.8500க்கு விற்பனையான நிலையில், இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.500 குறைந்து ரூ.8ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படு கிறது. உருட்டு உளுந்து, பட்டாணி பருப்பின் விலை சற்று குறைவு ஏற்பட்ட காரணத்தால், ஹோட்டல் உரிமையாளர்கள் சற்று நிம்மதி யடைந்துள்ளனர். அதேவேளை, பிற அத்தியாவசிய உண வுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.