நவம்பர் 9 நிலவரப்படி, அணை களின் மொத்தக் கொள்ளளவு சுமார் 195 டிஎம்சி அடியாக இருந்த நிலையில், அவற்றின் மொத்த சேமிப்பு 75.42 டிஎம்சி அடியாக இருந்தது. கடந்த வியாழன் காலை, அது 82.8 டிஎம்சி அடியாக உயர்ந்தது. கடந்த ஒரு வாரத்தில் அணைகளின் நீர் சேமிப்பு 38.6 சதவீதத்திலிருந்து 42.4 சதவீத மாக அதிகரித்துள்ளது. அதாவது 3.8 சதவீதம் அதிகரித்துள்ளது நவம்பர் 15-ஆம் தேதியுடன் முடி வடைந்த வாரத்தில், மாநிலத்தில் சராசரியாக 5.5 செ.மீ மழை பெய் துள்ளது. அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 15-ஆம் தேதி வரை யிலான காலகட்டத்தில் 24.2 செ.மீ. மழை பெய்துள்ளது. நவம்பர் 19-ஆம் தேதி காலை எட்டு மணி நிலவரப்படி, தென் மாவட்டங்களில் உள்ள வைகை நீர்மட்டம் 68.93 (மொத்தக் கொள் ளளவு 71 அடி) அடியாகவும், பெருஞ்சாணி நீர்மட்டம் 72.71 (மொத்தக் கொள்ளளவு 77 அடி) அடியாகவும் உள்ளது. தென் மாவட்டங்களில் முல் லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.70 (மொத்தக் கொள்ளளவு152 அடி) அடியாக உள்ளது. வைகை, பெரியாறு நீர் இருப்பைக் கொண்டு பேரணை-கள்ளந்திரி-மேலூர் கடை-திரு மங்கலம் பிரதானக் கால்வாய் களில் இரு போக, ஒரு போக பாசனத்திற்காக தண்ணீர திறந்து விடப்பட்டுள்ளது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 6 1.51 அடியாக உள்ளது (மொத்தக் கொள்ளளவு 120 அடி). பவானி சாகர் நீர்மட்டம் 74.85 அடியாக உள்ளது. (மொத்தக் கொள்ளளவு 105 அடி). இந்த இரண்டு அணைகளைவிட ஒப்பீட்டளவில் அமராவதி அணையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இங்கு 78.22 அடி நீர் உள்ளது. (மொத்தக் கொள்ளளவு 90 அடி) நவம்பர் முதல் வாரத்தில் மாநிலத்திற்கு 5.45 டிஎம்சி அடி காவிரி நீர் கிடைத்தது, இது நவம்பர் 1 ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை காவிரி நீர் மேலா ண்மை ஆணையம் அனுமதித் ததை விட (5.17 டிஎம்சி அடி) சற்று அதிகம். இருப்பினும் நவம்பர் 19-ஆம் தேதி நிலவரப்படி மணிமுத்தாறு- 118 (68,15) , சோலையாறு-160 (85.05), ஆழியாறு-120 (73.8) திரு மூர்த்தி அணை-60 (42.04) அடியாக உள்ளது.