புதுதில்லி, டிச.10- நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 28 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக நாடாளுமன்றத் தில் ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 7-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விவ சாயிகள் தற்கொலை தொடர்பாக மக்கள வையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பதிலளித்துள்ளார். அதில், 2017 ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் நாட் டில் 28 ஆயிரத்து 572 விவசாயிகள் தற் கொலை செய்து கொண்டுள்ளதாக தெரி வித்துள்ளார். 2017-ஆம் ஆண்டில் 5 ஆயிரத்து 955 விவ சாயிகளும், 2018-ஆம் ஆண்டில் 5 ஆயி ரத்து 763 விவசாயிகளும், 2019-ஆம் ஆண் டில் 5 ஆயிரத்து 957 விவசாயிகளும், 2020- ஆம் ஆண்டில் 5 ஆயிரத்து 579 விவசாயி களும், 2021-ஆம் ஆண்டில் 5 ஆயிரத்து 318 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த 5 ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண் டும் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித் துள்ளதுடன், இந்த பட்டியலில் முதல் மற்றும் 2 ஆவது இடத்தில் இந்த இரு மாநி லங்களே உள்ளன என்றும் நரேந்திர சிங் தோமர் தெரிவித்து உள்ளார். தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்ப கம் தரவுகளிலிருந்து இந்த புள்ளிவிவரங் கள் வழங்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் அமைச்சர், இந்த தற்கொலைகளுக்கான குறிப்பான பின்னணி காரணங்கள் அதில் இல்லை என்றும், விவசாயிகளின் தற்கொ லையைத் தடுக்க, பட்ஜெட்டில் விவசாயி களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து உள்ளது. பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்க செய்வதற்கான நடவடிக்கைகள், பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா உள் ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள் ளன என்றும் கூறியுள்ளார்.