states

நாளுக்கு நாள் அதிகரிக்கும் ‘இந்தியா’ மீதான வெறுப்பு அரசியலமைப்புச் சட்டத்திலிருந்தே ‘இந்தியா’ என்ற பெயரை நீக்க வேண்டுமாம்!

புதுதில்லி, ஜூலை 29 - 2024 மக்களவைத் தேர்தலில், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை அகற்றுவதற்கு, ‘இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி’ (Indian National Developmental Inclusive Alliance- I-N-D-I-A) என்ற புதிய கூட்டணியை எதிர்க் கட்சிகள் உருவாக்கியுள்ளன. இதில், காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணா முல், ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாதி, தேசிய வாத காங்கிரஸ், சிவசேனா, ஐக்கிய ஜனதாதளம் என மொத்தம் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுவரை எதிரும் புதிருமாக இருந்த இந்த கட்சிகள் ஒன்றிணை யும் பட்சத்தில், அது 2024 தேர்தலில் பாஜக-வுக்கு பலத்த அடியாக இருக்கும் என்று அரசியல் வல்லு நர்கள் கூறுகின்றனர். இது பாஜக-வுக்கு கலக் கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள குரலெழுப்பும் போதெல்லாம், பாஜக- வினர் மோடி.. மோடி.. மோடி.. என கூறினால், எதிர்க் கட்சியினரோ தங்களின் கூட்டணி பெயரான ‘இந்தியா’ என்ற பெயரை குறிப்பிடும் விதமாக.. இந்தியா... இந்தியா.. இந்தியா.. என்று முழங்கு வதும் நடக்கிறது. இது பாஜக-வினரின் ஆத்திரத்தை அதிகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சிகள் மீதான ஆத்தி ரம், அவர்கள் கூட்டணிக்குச் சூட்டியுள்ள ‘இந்தியா’  (I-N-D-I-A) என்ற பெயருக்கு எதிராக திரும்பியுள்ளது.  இதனால், எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ என தங்க ளின் கூட்டணிக்கு பெயர் சூட்டிய உடனேயே, அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, தனது டுவிட்டர் பயோவில் ‘இந்தியா’ என்ற பெயரையே நீக்கி, ‘பாரத்’ என்று மாற்றினார். அப்படியானால், மோடி அறிவித்த ‘ஸ்டார்ட் அப் இந்தியா’, ‘ஸ்கில் இந்தியா’, ‘டிஜிட்டல் இந்தியா’வை எல்லாம் என்ன செய்வது? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பிய நிலை யில், “அரசியலமைப்பால் ஏற்கப்பட்ட பெயரான இந்தியா, காலனித்துவ மரபில் இருந்து கடன் வாங்கப்பட்டது. இந்தியாவுக்கும் பாரதத்துக்கும் இடையிலான நாகரீக மோதல் பெயர்களை தாண்டி ஆழமானது. பாரதம் வெல்ல வேண்டும். பாரதம் வெல்லும்” எனவும் சர்மா சமாளித்தார். கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயரிடப்பட்டதற்கு எதிராக, அவினிஷ் மிஸ்ரா என்பவர் தில்லி பார காம்பா காவல் நிலையத்தில் 24 எதிர்க்கட்சிகள் மீது புகாரளித்தார். பாஜகவின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடியும்,

“இந்தியன் முஜாஹிதீன் அமைப்பும் இந்தியா என்ற பெயரை பயன்படுத்தியது. கிழக்கு இந்திய கம்பெ னியும் இந்தியா என்ற பெயரை பயன்படுத்தியது” என்று பேசி, ‘இந்தியா’ என்ற பெயரையே ஒரு பயங்கர வாதச் சொல் என்பது போல கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில்தான், பாஜக மாநிலங்களவை உறுப்பினரான நரேஷ் பன்சால் நாடாளுமன்றத்தில் பேசுகையில், “பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சியா ளர்களால் வைக்கப்பட்ட பெயர் இந்தியா. நமது நாட்டின் உண்மையான பழமையான பெயர் பாரத் என்பதுதான். சமஸ்கிருத பெயரான பாரத் ஆயி ரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த பெயராகும். நமது நாடு வரலாற்று சிறப்பு மிக்க  தனித்துவத்தை பெற்று உள்ளது. எனவே, காலனி யாதிக்க பெயரை தடை செய்ய வேண்டும். பாரத் என்ற பெயரை இந்தியா என பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மாற்றினார்கள். இந்தியா என்ற பெயர் அடிமைத்தன த்தின் குறியீடாக உள்ளது. அரசியலமைப்பில் இருந்தே அதை நீக்கம் செய்ய வேண்டும்” என அவர் பங்கிற்கு கொந்தளித்துள்ளார். “இந்தியா 75 வது சுதந்திர தினத்தை கொண்டா டும் தற்போதைய அமிர்த காலத்தில், அரசியல மைப்பின் முதலாவது ஆர்டிக்கிளில் நாட்டின் பெயரை பாரத் என்று மாற்றி, இந்தியா என்ற பெயரை நீக்கம் செய்ய வேண்டும். பாரத் என்று பெயர் மாற்றம் செய்வது, நாட்டின் பாரம்பரியத்தை மதிப்பதுடன், காலனியாதிக்க அடையாளத்தை நீக்கும் முதல் படியாகும்.”  என்றும் ஆவேசப் பட்டுள்ளார்.