தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் தகித்த தால் மக்கள் கடும் சிரமத் துக்கு உள்ளாகினர். மதுரை, வேலூர், ஈரோடு ஆகிய இடங்களில் 103 டிகிரி அள வுக்கு வெயில் கொளுத்தி யது.
2,000 ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை, ஒரே நேரத்தில் 20,000 ரூபாய் வரை மாற்றிக்கொள்ள எந்த கோரிக்கை சீட்டும், அடை யாளச் சான்றும் இல்லாமல் அனுமதிக்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தெளிவுபடுத்தியுள்ளது.
நாடு முழுவதும் வெப்ப அலைக்கு நிகராக வெயில் கொளுத்தி வரும் நிலை யில், கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் ஞாயி றன்று ஆலங்கட்டி மழை பெய்தது. பளிங்கு கல் அள விலான ஆலங்கட்டிகளால் கார்கள் மற்றும் பிற வாக னங்கள் சேதமடைந்தன. மோசமான வானிலை கார ணமாக கொல்கத்தா, புனே ஆகிய நகரங்களில் வந்த விமானங்கள் சென்னையில் தரையிறங்கின.
மேகாலயா தலைநகர் ஷில் லாங்கில் உள்ள 100 ஆண்டு களுக்கும் மேலான பழமை யான காசி ஜைந்தியா பிரஸ்பைடிரியன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தீ விபத் தில் எரிந்து நாசமானது.
எல் சால்வடாரின் மோனு மெண்டல் கால்பந்து மைதா னத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்த நிலையில், 500க்கும் மேற் பட்டோர் காயமடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 370-வது சட்டப்பிரிவை மீண்டும் அமலாக்கும் வரை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பிடிபி தலைவர் மெகபூபா முப்தி அறிவித்துள்ளார்.
அரசுப் பேருந்துகளில் மே 23 முதல் டிக்கெட் வழங்கும்போது பயணிகளிடம் 2000 ரூபாய் நோட்டை வசூலிக்க வேண்டாம் என திருநெல்வேலி போக்குவரத்து மண்டலம் அறி வித்துள்ளது.
தில்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜூக்கு அம்மாநில தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் கொலை மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அமைச்சர் சவுரப் பரத்வாஜ் துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.