states

‘ஊழல் மட்டுமே கேரண்டி’ - மதுக்கூர் இராமலிங்கம்

2014 இல் நரேந்திர மோடியை “வளர்ச்சி நாயகன்” என்று வர்ணம் அடிக்க அவரது நெருங்கிய கூட்டாளியான அதானி குழுமம் 3 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்தது. பிரதமராக பொறுப்பேற்க அதானியின் தனி விமானத்தில் ஏறி  வந்த மோடி, இப்போது விமான நிலை யங்களையும், ரயில் நிலையங்களை யும், நிலக்கரிச் சுரங்கங்களையும், துறைமுகங்களையும் அதானிக்கு அள்ளிக் கொடுத்து மகிழ்கிறது. அதானி நிறுவனத்தின் பங்குச்சந்தை முறைகேடுகளையும், மோசடிகளையும் அமெரிக்க ஆய்வு நிறு வனமான ஹிண்டன்பர்க் அம்பலப்படு த்தியது. அதானி நிறுவனம் பங்குச் சந்தையில் தன்னை ஊதி பெரிதாக்கிக் காட்ட பல முறைகேடுகளைச் செய்தது. இதற்காக, எல்ஐசி, பாரத ஸ்டேட் வங்கி போன்ற பொதுத் துறை நிறுவனங் களும் சூறையாடப்பட்டன. இது குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு மறுத்த மோடி அரசு, தன்னுடைய ஆத்ம நண்பன் அதானிக்காக ஆளுங்கட்சிக்காரர் களையே கலகம் செய்ய வைத்து நாடா ளுமன்றத்தையே முடக்கி நன்றி யுணர்ச்சியின் உச்சத்திற்கே சென்றார். அதானி, ஆர்எஸ்எஸ் அமைப்பி னால் உருவாக்கப்பட்ட ஒரு கார்ப்பரேட் முதலாளி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேஷியாவில் இருந்து இந்தியாவுக்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் மட்டும் ரூ.42 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது என பைனான்சியல் டைம்ஸ் ஏடு அம்பலப்படுத்தியது. பிரான்ஸ் நாட்டிடமிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்குவதற் காக மோடி அரசினால் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் மட்டும் 5 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ரபேல் விமானங் களை வாங்குவதற்கு பேசப்பட்ட தொகையை விட, பல மடங்கு அதிகம் கொடுத்து வாங்கியது மோடி அரசு. இதை பிரான்ஸ் அரசே ஒப்புக் கொண்டுள் ளது. இந்த அநியாய பேரத்தால் லாபம் அடைந்தது பாஜகவின் பாதுகாவல ரான அனில் அம்பானி.

ரபேல் போர் விமானம் இந்தியா வுக்கு புறப்பட்ட போது, எலுமிச்சம் பழம் வைத்து அதன் மீது விமானத்தை ஏற்றி மகிழ்ந்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். நசுக்கப்பட்டது எலுமிச்சம் பழம் மட்டுமல்ல; இந்திய மக்களின் வரிப்பணமும்தான். கொரோனா என்கிற கொள்ளை நோய் காலத்திலும்கூட ஊழலுக்கு புதிய வழிமுறையை கண்டுபிடித்தது மோடி அரசு. பிரதமர் நிவாரண நிதி  திட்டம் ஏற்கனவே இருக்கும் நிலையில், கொரோனா காலத்தில் பொதுமக்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களிட மிருந்து நிதி பெறுவதற்காக பிஎம்கேர்ஸ் என்ற திட்டத்தை பிரதமர் மோடி படத்துடன் அறிமுகப்படுத்தினார்கள். 38 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.2100 கோடி அளவுக்கு நன்கொடை தந்தன. பள்ளிக் குழந்தைகளும்கூட நிதி அனுப்பினார்கள். ஒன்றிய அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து கட்டாயமாக பிடித்தம் செய்யப்பட்டது. கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பல ஆயிரம் கோடி நிதி பெறப்பட்டது. ஆனால், இதுகுறித்து கணக்கு கேட்ட தற்கு இதற்கும் ஒன்றிய அரசுக்கும் தொடர்பு இல்லை என்றும், இது ஒரு தனி யார் அறக்கட்டளை என்றும், இதன் கணக்கு வழக்குகளை யாரும் தணிக்கை செய்ய முடியாது என்றும் பதில் தரப்பட்டது. பிரதமரின் பெயரால் நிதி வாங்கி னார்கள். ஆனால் அதன் கணக்கு வழக்கு யாருக்கும் தெரியாது. அறக் கட்டளை உறுப்பினர்கள் அனைவரும் பாஜகவைச் சேர்ந்தவர்கள். கட்சி நிதிக்கு தேர்தல் பத்திரத்தை மட்டுமல்ல, கொரோனாவையும் பயன்படுத்திக் கொள்ள இவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். தேர்தல் வந்தவுடன், ‘மோடியின் கேரண்டி’ என்ற விளம்பரம் காதை கிழிக்கிறது. இவர் கடந்த காலத்தில் மக்க ளுக்குத் தந்த எந்த உத்தரவாதத்தையும் நிறைவேற்றவில்லை. இங்கு உத்தர வாதமாக நடந்து கொண்டிருப்பது ஊழல் மட்டும்தான். பாஜக ஆட்சியின் 10 ஆண்டு கால ஊழலை பட்டியலிட்டுக் கொண்டே சென்றால், அது பல ஆயிரம் பக்கங்கள் நீளும். நதி மூலம், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். ஆனால், இவர்களது ஊழலின் மூலத்தை தேடிச் சென்றால், அது அம்பானி-அதானி போன்ற கார்ப்பரேட் கூட்டாளிகளின் கருவறை நோக்கிச் செல்லும். உண்மை யில், மோடி அரசு ஊழலை ஒழிக்க வில்லை; ஒளித்து வைத்திருக்கிறார்கள். ஒன்றிய அளவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே, இந்த ஊழலுக்கு முடிவு கட்ட முடியும்.