states

செனகல் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு பாஸ்பேட் இறக்குமதி

டக்கர்,  ஜூன் 2-  செனகல் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு  பாஸ்பேட் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய  குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அரசு முறைப் பயணமாக ஆப்பிரிக்க நாடுகளான காபோன், செனகல் மற்றும் மத்திய கிழக்கு நாடான கத்தாருக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.  செனகல் நாட்டின் டக்கர் நக ரத்திற்குச் சென்ற வெங்கையா நாயுடு விற்கு  சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது. செனகல் நாட்டின் ஜனாதிபதி மேக்கி சாலுனை அவா் சந்தித்தார். விவ சாயம், சுகாதாரம், பாதுகாப்பு, ரயில்வே,  எரிசக்தி, கலாச்சாரம் போன்ற துறை களில் இருநாடுகளின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  செனகல் பயணத்தின் முக்கியத்துவம் குறித்து வெளியுறவு அமைச்சக  செய லாளர் தம்மு ரவி, கூறுகையில், செனகல் நாடு மிகப்பெரிய இயற்கை வளங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக பாஸ்பேட் அங்கு அதிகளவில் கிடைக்கிறது. செனகல் நாட்டிலிருந்து பாஸ்பேட்டை இறக்குமதி செய்வதற்கு இந்தச் சுற்றுப் பயணம் உதவும் என்றார்.   குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு செனகல் தொழில்  துறையினா் மற்றும் இந்திய வம்சாவளி யினருடன் கலந்துரையாடுவா் என எதிர் பார்க்கப்படுகிறது. ஜூன் 4- ஆம் தேதி வரை செனகல் நாட்டில் சுற்றுபயணம் மேற்கொள்கிறார்.