states

அகில இந்திய இடம் கிடைத்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்: மருத்துவக் கல்வி இயக்குநர்

சென்னை, ஜூலை 27- மருத்துவக்கல்வி கலந்தாய்வில்  தமிழ்நாடு கல்லூரிகளில் அகில இந்திய இடம் கிடைத்தால் அதை ஏற்றுக் கொள்ளுங் கள் என மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்தி மலர்,  மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். சென்னை கிண்டியிலுள்ள கலைஞர்  பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை யில் சிறப்பு மற்றும் 7.5 விழுக்காடு உள்  ஒதுக்கீட்டிற்கு நேரடி கலந்தாய்வு நடை பெற்று வரும் நிலையில், மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்தி மலர் மருத்துவ சேர்க்கைக் குழு செயல்பாடு குறித்து ஆய்வு  செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் சார்பில் சிறப்பு பிரிவினர் மற்றும் அரசு பள்ளிகளில் படித்த  மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டுக்கான நேரடி கலந்தாய்வு வியாழனன்று (ஜூலை 21) நடைபெற்றது. விளையாட்டு பிரிவு மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் பிரிவுக்கான கலந்தாய்வு முடிவடைந்தது. 25,856 பேர்  பொது பிரிவுக்கு, 13,176 பேர் நிர்வாக  ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித் துள்ளனர். தமிழ்நாட்டில் 36 அரசு கல்லூரி கள், 21 சுயநிதிக் கல்லூரிகள், 4 தனியார் கல்லூரிகள் உள்ளன. 15 விழுக்காடு அகில  இந்திய மருத்துவ இட ஒதுக்கீடு தவிர  மற்றவற்றுக்கு கலந்தாய்வு நடைபெறு கிறது.

இந்த ஆண்டு 223 இடங்கள் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் 93 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 80 பேர்தான் தகுதி வாய்ந்த வர்கள் உள்ளனர்.  மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு அவர்கள் வேறு துறைகளில் விருப்பம் இருப்பது கூட  காரணமாக இருக்கலாம். தகுதி பெற்றி ருக்கக் கூடிய 80 மாற்றுத்திறனாளி மாண வர்களுக்கு மருத்துவ இடம் கட்டாயம் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் முதல் சுற்று கலந்தாய்வு முடிவுகள் 3ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. அதே நேரத்தில் அகில இந்திய கலந்தாய்வு முடிந்து மாணவர்கள் 4ஆம் தேதிக்குள் சேர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஒன்றிய அரசின்  கலந்தாய்வில் தேர்வு பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர சிரமம் ஏற்படுமா  என்ற கேள்விக்கு, அகில இந்திய இடம் தமிழ்நாடு கல்லூரிகளில் கிடைத்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் நாங்கள் அறிவுறுத்தி வருகிறோம்.  அரசு மருத்துவக் கல்லூரிகள் அனைத்தி லும் நல்ல பயிற்சிதான் கொடுக்கப்படுகிறது.  மத்திய இடத்தை பொறுத்தவரை  வரும் 29 இறுதி நாள் என தெரிவித்துள்ளார். நாம்  31ஆம் தேதி வரை இறுதி தேதி அளித் துள்ளோம். எனவே இரண்டு நாட்களில் யோசித்து முடிவு செய்யலாம். அகில இந்திய  ஒதுக்கீடானாலும் சரி, மாநில அளவிலான ஒதுக்கீடானாலும் சரி, கிடைத்த கல்லூரி யில் சிறப்பாக பயின்று நல்ல மருத்துவராக வரவேண்டும் என்றார்