மோடி அரசானது, நாட்டிற்கு இருக்கும் ‘இந்தியா’ பெயரை கைவிடு மானால், அந்தப் பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கோரலாம் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1947-இல் நாட்டுப் பிரிவினைக்குப் பிறகு, நேரு தலைமையிலான அரசாங்கம் ‘இந்தியா’ என்ற பெயரை பயன்படுத்துவதற்கு, பாகிஸ்தான் தலைவரான முகம்மது அலி ஜின்னா எதிர்ப்பு தெரிவித்தார். ‘இந்தியா’ என்பது முழு துணைக்கண்டத்தை யும் உள்ளடக்கியது. அதாவது, சிந்து சமவெளி உட்பட எல்லா பகுதியையும் உள்ளடக்கியதே இந்தியா. இண்டஸ் வேலி பகுதி முழுக்கவே இந்தியாதான். அதனால், பாகிஸ்தானைப் போல, இந்துஸ்தான் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார். ஆனால், ஜின்னா வின் பரிந்துரையை நிராகரித்த நேரு, ‘இந்தியா’ என்ற வரலாற்றுப் பெயரையே தேர்ந்தெடுத்தார். தற்போது, இந்தியா என்ற பெயரை மோடி அரசு கைவிடுமானால், அதனை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளும், 76 ஆண்டுகளுக்குப் பிறகு, முகமது அலி ஜின்னாவின் கனவை நிறைவேற்றிக் கொள்ளும் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதாவது, இந்தியா என்ற பெயர் கைவிடப் பட்டு, ஐக்கிய நாடுகள் அவையிலும் ‘பாரத்’ என மாற்றப்பட்டால், இந்தியா என்ற பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கோருவதுடன், மீண்டும் ‘இந்தியா’ என்ற பெயர் சூட்டப்படாதவாறு, அந்தப் பெயரை முடக்கி வைப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரி வித்துள்ளன.