செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சியில் நூறு நாள் வேலையை தொடர்ந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த திட்டத்திற்கு தற்போது தேவையான நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் முடங்கியுள்ளன. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரசு உடனடியாக கூடுதல் நிதி வழங்க வேண்டும் அப்பகுதியில் உள்ள 5804 பேருக்கும் ஜாப் கார்டு வழங்க வேண்டும், பகுதி முழுவதும் உள்ள தெருக்களில் சுகாதார கேடு விளைவிக்கும் கழிவுகளை அகற்ற வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் நல்லூர் கிளையின் செயலாளர் பி.ராஜேந்திரன் தலைமையில் பேரூராட்சி அலுவலகம் முன்பு செவ்வாயன்று (ஆக.22) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கோரிக்கைகளை விளக்கி கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.அரிகிருஷ்ணன், செய்யூர் வட்டச் செயலாளர் எஸ்.ரவி, வட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.கோவிந்தசாமி, எம்.வெள்ளி கண்ணன் உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக பேரூராட்சி செயல் அலுவலரிடம் கட்சியின் நிர்வாகிகள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.