தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் பிப். 18 அன்று மாநில தலைவர் பி.டில்லிபாபு தலைமையில் காஞ்சி புரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பெ.சண்முகம், மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன் உட்பட மாநி லக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: வாச்சாத்தி கிராம பழங்குடி மக்கள் மீது அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசு அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை அனைவரும் அறிந்த ஒன்று. இந்த வன்கொடுமைக்கு எதிராக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய தொடர்ச்சி யான போராட்டம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கை காரணமாக குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை 2023, செப்டம்பர்-29 அன்று சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்த துடன் குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள பல்வேறு அம்சங்களை தமிழ்நாடு அரசு நிறைவேற்று வேண்டுமென்று முதலமைச்சர் அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அக்டோபர் - 8 அன்று நேரில் சந்தித்து கேட்டுக் கொண்டனர். ஏறத்தாழ நான்கு மாதங்கள் கடந்த பிறகும், தீர்ப்பு அமல்படுத்தப்படாமல் இருப்பது குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலக்குழு தனது ஆழ்ந்த கவலை யை தெரிவித்துக் கொள்கிறது. நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் இருப்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். குறிப்பாக, பாலியல் வன்கொடுமைக்குள்ளான 18 பெண்களின் குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் ரூபாய் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்த வேலை வழங்குவது, வாச்சாத்தி கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்குவது, 1992ஆம் ஆண்டு சம்பவம் நடைபெற்ற போது பொருப்பில் இருந்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட, அம்சங் களை முழுமையாக நடைமுறைப்படுத்த மேலும் தாமதமில்லாமல் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமாறு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.