உச்சநீதிமன்றம் : தமிழில் வெளியான தீர்ப்புகள்!
புதுதில்லி, ஜன. 27 - உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அறி வித்தபடி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட நாட்டின் அங்கீகரிக்கப் பட்ட மொழிகளில் வெளியிடப் பட்டுள்ளன. உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் கிடைக்கச் செய்வதற்காக செயலாற்ற வேண்டி யதன் அவசியத்தைப் பற்றி உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அண்மையில் பேசி யிருந்தார். இதற்காக நீதிபதி ஏ.எஸ். ஓகா தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளதாகவும், இந்தக் குழுவில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ், என்ஐடி-யைச் சேர்ந்த தர்மிஸ்தா, தில்லி ஐஐடி-யைச் சேர்ந்த மித்தேஷ் கப்தா, ஏக்.ஸ்டெப் பவுண்டேசனின் விவேக் ராகவன், சுப்ரியா சங்கரன் ஆகி யோர் உள்ளதாகவும் அவர் தெரி வித்திருந்தார். அதன்படி வியாழனன்று முதற்கட்டமாக உச்சநீதிமன்றத்தின் 1091 தீர்ப்புகள், தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மொழிகளில் இணையத்தில் பதிவேற்ற ப்பட்டுள்ளன. இவற்றில் தமிழில் 52, அசாமியில் 4, இந்தியில் 1554, கன்னடத்தில் 17, மலை யாளத்தில் 29, மராத்தியில் 14, ஒடியாவில் 21, பஞ்சாபியில் 4, தெலுங்கில் 28, உருது மொழியில் 3 தீர்ப்புகள் உச்ச நீதிமன்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
நேரடி பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம்
சென்னை, ஜன. 27- நேரடி பணி நியமனங்களின் போது, ஊழல் நடவடிக்கைகள் இல்லாத அளவுக்கு வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முறையாக விளம்பரங்கள் செய்யப்படாததால், தகுதி இருந்தும் தேர்வு நடைமுறைகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும், அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சரின் செல்வாக்கால் மேற்கொள்ளபட்ட நியமனங்களை ரத்து செய்யக் கோரியும் ஈஸ்வரி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது அதிமுக ஆட்சியின்போது கோவை மாநகராட்சியில் ஒரே நாளில் 54 இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட்டதை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், 69 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, 440 பேரிடம் நேர்மு கத் தேர்வு நடத்தப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு 54 பேர் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், யாருக்கும் சலுகை காட்டப்பட வில்லை. உரிய தேர்வு நடைமுறை, இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றியே நியமனங்கள் வழங்கப்பட்டன என்று கோவை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கருணை அடிப்படையில் 2016ஆம் ஆண்டு தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்ட மனுதாரர், இளநிலை பொறியாளர் தேர்வு நடைமுறைகளில் கலந்துகொள்ளாத நிலையில் வழக்கு தொடர முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளார். மேலும், நேரடி பணி நியமனங்களின் போது, ஊழல் நடவடிக்கைகள் இல்லாத அளவுக்கு வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
சென்னை, ஜன.27 தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு அடுத்த 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக் கையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக் கூடும். அதன் பிறகு தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஜனவரி 31ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பிப்ரவரி 1ஆம் தேதி இலங்கை கடற் பகுதிகளை சென்று அடையக்கூடும். இதன் காரணமாக 29ஆம் தேதி வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதி களில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக் கூடும். 30ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங் கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதி களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மித மான மழை பெய்யக்கூடும். 31ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆர்.நல்லகண்ணு உடல்நலக்குறைவு; ஓரிரு நாளில் வீடு திரும்புவார்
சென்னை, ஜன.27- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு விற்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றும், மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு ஓரிரு நாட்களில் இல்லம் திரும்புவார் என்று அக்கட்சியின் மாநிலச் செய லாளர் முத்தரசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு சாதாரண உடல்நலக் குறைவால் 24.01.2023 செவ்வாய்க்கிழமை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகின்றார்கள். மருத்துவர்கள் ஆலோசனைக்குப் பிறகு அவர் ஓரிரு நாட்களில் இல்லம் திரும்புவார் என தெரி வித்துக் கொள்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார். முன்னதாக கடந்த 24-ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வந்த நல்லகண்ணுவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு நுரையீ ரல் தொற்று பாதிப்பு இருப்ப தாகத் தெரிவித்தனர். இதையடுத்து, மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில், ராஜீவ் காந்தி மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்ட நல்லகண்ணுக்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறும்போது, “நல்லகண்ணுவின் உடல்நிலை சீராக உள்ளது. பொதுப்பிரிவு மருத்துவர்கள், நுரையீரல் துறை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து மருத்துவக் குழுவினர் அவரது உடல் நிலையைக் கண்காணித்து வருகின்றனர்” என்றார்.
நிதித்துறை புதிய வலைத்தளம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜன. 27- நிதித்துறை சார்பில் உருவாக்கப் பட்டுள்ள புதிய வலைதளத்தை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிதித்துறை சார்பில் தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 6 நிறுவனங்க ளுக்கு முதலீட்டு அனுமதி கடிதங்களை வழங்கியதுடன், தமிழ்நாடு மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்ப தற்காக உருவாக்கப்பட்டுள்ள Companies Compliances and Financials Monitoring System http://www.ccfms.tn.gov.in என்ற வலைதளத்தையும் தொடங்கி வைத்தார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாடு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நிதித் திட்டத்தின் கீழ், பங்கு முதலீடு செய்வதற்காக 5 புத்தொழில் நிறுவனங்களில் ரூ/ 7.50 கோடிக்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
‘‘கல்வியை வியாபாரமாக்காதே’’ இத்தாலியில் மாணவர்கள் போராட்டம்
ரோம், ஜன.26- பள்ளிக்கூட அமைப்பைக் குலைக்கும் வகையிலும், கல்வியை நிறுவனங்களுக்கும், தனியாருக்கும் தாரை வார்க்கும் வகையிலும் உள்ள இத்தாலி அரசின் கொள்கைக்கு எதிராக மாணவர்கள் கடும் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள். ஐரோப்பிய நாடுகளிலேயே இத்தாலியில்தான் கல்விக்கு மிகக்குறைவான அளவில் அரசு நிதி ஒதுக்கப்படுகிறது. 10 விழுக்காடு நிதி ஒதுக்கீடு என்பது ஐரோப்பிய நாடுகளின் சராசரியாகும். இத்தாலியில் எட்டு விழுக்காடு நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதி ஒதுக்கீட்டை குறைந்தபட்சம் ஐரோப்பிய நாடுகளில் சராசரி அளவுக்காவது அதிகரிக்க வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து கோரி வந்தன. இந்நிலையில் அரசின் கல்விக் கொள்கைகள் தனியாருக்கு கல்வித்துறையைத் தாரை வார்க்கும் வகையில் இருப்பதால், உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். கல்வித்துறையின் அவலத்தால் தங்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டதால், வேறு நாட்டிற்கே குடியேறிய சில பெற்றோர்களின் முடிவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓராண்டுக்கு முன்பாக, பள்ளி சார்பாக ஒரு தொழிற்சாலைக்குப் பயிற்சிக்கு சென்றிருந்த 18 வயதுப் பையன் உலோகக் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்தையும் மாணவர்கள் போராட்டத்தின் போது நினைவு கூர்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் நிலவும் கல்வியின் நிலை பற்றிய ஆய்வுகள் அனைத்துமே இத்தாலியில் நிலைமை மோசமாக இருப்பதையே காட்டுகின்றன. இந்நிலையில்தான் கல்வியைத் தனியார் மயமாக்கும் முயற்சிகள் கல்வித்துறையை மேலும் சீரழித்துவிடும் என்று மாணவர்கள் கருதுகிறார்கள். மாணவர்களின் இந்த நிலைபாட்டிற்கு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
‘370’ ரத்துக்கு எதிரான வழக்கை எதிர்கொள்ள மோடி அரசு அஞ்சுகிறது!
பானிஹால், ஜன. 27 - அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370- நீக்கத்திற்கு எதிரான வழக்கை ஒன்றிய அரசு இழுத்தடிப்பதற்குக் காரணமே, அந்த வழக்கைக் கண்டு மோடி அரசு அஞ்சுவது தான் என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல் வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரு மான உமர் அப்துல்லா பேசியுள்ளார்.ஜம்மு- காஷ்மீரின் பானிஹாலில் நடைபெற்ற ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப்பயண த்தில் கலந்து கொண்டு உமர் அப்துல்லா பேசி யுள்ளார். அப்போது அவர்கூறியிருப்பதாவது: ஒற்றுமை யாத்திரையின் நோக்கம் ராகுல் காந்தியின் புகழை மேம்படுத்துவது அல்ல. மாறாக நாட்டில் நிலவும் சூழ்நிலை யை மாற்றுவதையே நோக்கமாககொண்டது. “நாங்கள் இந்த அணிவகுப்பில் இணைந் திருப்பது ஒரு தனிநபரின் உருவத்திற்காக அல்ல, மாறாக நாட்டின் உருவத்திற்காக.” சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக ஆளும் கட்சிக்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லை. இது அவர்களின் அணுகுமுறை யைக் காட்டுகிறது. ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தைப் பொறுத்தவரை, “பிரிவு 370-ஐ மீட்டெடுப்பதற்கான வழக்கை நீதி மன்றத்தில் நாங்கள் போராடுவோம். அர சாங்கம் இழுத்தடிக்கும் விதம் எங்களின் வழக்கு மிகவும் வலுவானது என்பதை நமக்குச் சொல்கிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரில் நடந்த இரண்டு தேர்தல் களுக்கு இடையே இதுவே மிக நீண்ட காலமாகும். பயங்கரவாதத்தின் உச்சக்கட்ட த்தில் கூட அப்படி இல்லை. ஜம்மு - காஷ்மீர் மக்கள் தேர்தலுக்கு பிச்சை எடுக்க வேண்டும் என்று இந்த அரசு விரும்புகிறது. நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல, தேர்த லுக்காக யாசகம் எடுக்க விரும்பவில்லை.இவ்வாறு என்று அவர் கூறினார்.